ஜன.7.
சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பதிலுரை அளித்து தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் பேசியது-
திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றியது, யார் ?.அண்ணா நூலகத்தை பாழ்படுத்தியது யார்?. செம்மொழிப் பூங்காவில் கலைஞர் பெயரை மறைத்தது யார்?. பள்ளி பாடத்திட்டத்தில் கருணாநிதியின் செம்மொழி பாடலை காகிதம் ஒட்டி மறைத்ததுயார்?. மதுரவாயல் துறைமுகம் திட்டத்தை நிறுத்தியது யார்?. பெரியார் நினைவு சமத்துவபுரம் கள் சீரழித்தது யார்?.
தமிழகத்தில் எந்த அம்மா உணவகமும் மூடப்படக்கூடாது என்பது என்னுடைய எண்ணம். அம்மா உணவகத்தை மூடும் திட்டம் இல்லை. ஜெயலலிதா நினைவிடம் பொதுப்பணித் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது .
சட்டம் ஒழுங்கைப் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் பேசினார். எந்த வழக்கிலும் யாரையாவது கைது செய்யாமல் இருக்கிறோமா?. யாராவது தலைமறைவாக விட்டுவிட்டோமா?. எந்த குற்றவாளிகள் மீதாவது நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறோமா?. சொல்லுங்கள். திமுகவினர் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
காவல்துறை பற்றி எதிர்க்கட்சித் தலைவர் குறை கூறுகிறார் . தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தியதை டிவியை பார்த்து தெரிந்துகொண்டேன் என்று சொன்னது யார்?. அந்த வழக்கு பாயுமா இந்த வழக்கு பாயுமா என்று பயந்து நடுங்கும் அவர்களுக்கெல்லாம் எங்களால் பாதுகாப்பு தரமுடியாது . குற்றம் சுமத்துபவர்கள். அதற்கு முன்பாக தங்கள் கைகளில் உள்ள கறைகளை பார்க்க வேண்டும் என்றார் முன்னதாக முதல்வரின் பதில் உரையை புறக்கணித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.