• கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
Friday, November 14, 2025
Karurxpress
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
Karurxpress
No Result
View All Result
Home கரூர்

வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

karurxpress by karurxpress
November 19, 2024
in கரூர்
0
வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு
919
VIEWS

நவ.19.

கரூர் மாவட்டம், குளித்தலை உட்கோட்டம், மாயனூர் காவல் நிலைய சரகம் சேங்கல், மேல பண்ணைகளத்தில் ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவி சுப்புரெத்தினம் ஆகிய இருவரும் கடந்த 25.10.2024 ஆம் தேதி இரவு சுமார் 10.30 மணியளவில் வீட்டில் உறங்கி கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்து அவர்களை மிரட்டி நகைகளை கொள்ளையடித்துவிட்டு சென்றனர். இதுகுறித்து மாயனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கரூர் மாவட்ட எஸ்.பி. பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவுப்படி குளித்தலை உட்கோட்ட டிஎஸ்பி. செந்தில்குமார் மேற்பார்வையில் மாயனூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

மேற்படி தனிப்படையினர் சம்பவம் நடைபெற்ற பகுதியை சுற்றியுள்ள CCTV Camera பதிவுகளை ஆய்வு செய்தனர். சந்தேக நபர்களின் அலைபேசி எண்களை ஆராய்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டதன் மூலமாக கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது 1. விக்கி @ விக்னேஸ்வரன், சிவகங்கை மாவட்டம், 2. தினேஷ் வேலன், சிவகங்கை மாவட்டம், 3. அசோக் @ முத்துப்பாண்டி, சிவகங்கை மாவட்டம், 4. வெங்கடேஷ், பரமக்குடி ராமநாதபுரம் மாவட்டம், 5. விக்கி @ விக்கனேஸ்வரன், பல்லடம், திருப்பூர் மாவட்டம், 6. அருண்குமார், கரூர் மாவட்டம் ஆகியோர் என கண்டுபிடித்தனர். மேற்படி அனைவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து வழக்கின் சொத்து கைப்பற்றப்பட்டும், கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய கார்கள், இரு சக்கர வாகனம் மற்றும் அருவாள் கைப்பற்றப்பட்டு எதிரியானவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இவர்கள் மீது சிவகங்கை மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது.

சிறப்பாக பணிபுரிந்து கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்த குற்றப்பிரிவு தனிப்படையினரை கரூர் மாவட்ட எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டி வெகுமதி வழங்கினார். மேலும் பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் CCTV கேமராக்களை பொருத்திக் கொள்ளும்படியும் அறிவுறுத்தினார்.

Related Posts

போதைப் பொருட்கள் நடமாட்டம்:  புகார் செய்ய புதிய செயலி அறிமுகம்

கரூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு (T E T) ஏற்பாடுகள்

by karurxpress
November 14, 2025
0

கரூர்‌.நவ.14. கரூர் மாவட்டத்தில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் (TN...

பூச்சி தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்க விழிப்புணர்வு வழிகாட்டி வழங்கல்

பருவமழை காலம்: தென்னை மரங்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

by karurxpress
November 14, 2025
0

நவ.15 . கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:- வடகிழக்கு பருவமழை...

குழந்தைகள் அறிவியல் திருவிழா

குழந்தைகள் அறிவியல் திருவிழா

by karurxpress
November 14, 2025
0

நவ.15. கரூர் பரணி பார்க் கல்விக் குழுமத்தில் “நிறுவன அறங்காவலர் சாமியப்பர் நினைவு...

தேசிய நூலக வார விழா: சிறை வாசிகளுக்கு ஓவியப்போட்டி

தேசிய நூலக வார விழா: சிறை வாசிகளுக்கு ஓவியப்போட்டி

by karurxpress
November 14, 2025
0

கரூர். நவ. 14. 58 -ஆவது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு,...

Load More
  • Trending
  • Comments
  • Latest
கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

May 14, 2024
கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

May 20, 2024
வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

November 19, 2024
ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

April 26, 2025

கரூர் மாவட்ட திமுக முன்னோடிகள் 270பேருக்கு பொற்கிழி முப்பெரும் விழாவில் செந்தில்பாலாஜி வழங்கினார்

0

ரூ 750 கோடியில் காவிரியில் தடுப்பணை குளித்தலை அருகே அமைச்சர் ஆய்வு

0

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் கரூர் மாவட்டம் இரண்டாம் இடம்

0

இல்லாத நிறுவனத்தின் ஆய்வறிக்கை பெற்று இயங்கிய கல்குவாரிகளால் பல கோடி அரசுக்கு இழப்பு ஆலோசனை கூட்டத்தில் அதிர்ச்சி தகவல்

0
போதைப் பொருட்கள் நடமாட்டம்:  புகார் செய்ய புதிய செயலி அறிமுகம்

கரூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு (T E T) ஏற்பாடுகள்

November 14, 2025
பூச்சி தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்க விழிப்புணர்வு வழிகாட்டி வழங்கல்

பருவமழை காலம்: தென்னை மரங்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

November 14, 2025
குழந்தைகள் அறிவியல் திருவிழா

குழந்தைகள் அறிவியல் திருவிழா

November 14, 2025
தேசிய நூலக வார விழா: சிறை வாசிகளுக்கு ஓவியப்போட்டி

தேசிய நூலக வார விழா: சிறை வாசிகளுக்கு ஓவியப்போட்டி

November 14, 2025
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved

No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved