பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில் தூக்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பாம்பனில் கடலுக்கு நடுவே சுமார் ரூ.550 கோடியில் இந்த புதிய ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது.
சாலை பாலத்தில் இருந்து ஒரு ரயிலையும், கப்பலையும், புதிய எக்ஸ்பிரஸ் ரயில் சேவையையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் பிரதமரை வரவேற்றனர்.