• கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
Thursday, July 3, 2025
Karurxpress
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
Karurxpress
No Result
View All Result
Home கரூர்

நூல் விலை உயர்வு, ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி வரி உயர்வில் இருந்து ஜவுளித் தொழிலை காப்பாற்றுங்கள்: முதல்வரிடம் உற்பத்தியாளர்கள் கோரிக்கை மனு

karurxpress by karurxpress
November 24, 2021
in கரூர்
0
136
VIEWS

நவ.24.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை கோவையில் சந்தித்து கரூர் ஜவுளி தொழிலுக்கு தேவையான நூல் விலை, ஜிஎஸ்டி வரி பிரச்சனைக்கு தீர்வு காண கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன், கரூர் வீவிங் நிட்டிங் பேக்டரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தனபதி, கரூர் கைத்தறி ஏற்றுமதி துணி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் காளியப்பன் ஆகியோர் அளித்த கோரிக்கை மனு-.

தமிழகத்தை தொழில்துறையில் 2030ஆம் ஆண்டு ஒரு ட்ரில்லியன் எக்கானமி மற்றும் 100 பில்லியன் டாலர் ஏற்றுமதி என்ற தாரக மந்திரத்தோடு தொழில் துறையினருக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் திட்டங்களை அறிவித்து அரசு எந்திரத்தை செயல்படுத்தி நல்லாட்சி தந்து கொண்டிருக்கும் தங்களுக்கு கரூர் ஜவுளி துறை சார்ந்த தொழில் முனைவோர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்த்துக்கள்.

4ஆயிரம் கோடி ஏற்றுமதி

வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பில் இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் கரூர் நகரம் 4000 கோடிக்கும் மேலான வீட்டு உபயோக துணிகளை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்து எக்ஸ்போர்ட் எக்ஸலண்ட் என்ற அங்கீகாரத்தை ஒன்றிய அரசிடமிருந்து பெற்றிருக்கிறது. உள்நாட்டு உபயோகத்திற்கு தேவையான துணிகளை உற்பத்தி செய்து 4000 கோடிக்கும் மேலான வர்த்தகம் செய்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் சுமார் ஆயிரம் ஜவுளித் துறை சார்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இரண்டு லட்சம் தொழிலாளர்களின் நேரடி வேலை வாய்ப்பும் 5 லட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கொடுக்கப்படுகின்றன. 8000 கோடிக்கு மேலான வர்த்தகம் செய்து வரும் கரூர் ஜவுளி துறை 2030ஆம் ஆண்டில் 25 ஆயிரம் கோடி அளவிற்கு வர்த்தகம் செய்ய வேண்டும் என்ற இலக்கை எட்ட பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு தடையாகவும் தொழில் நசிந்து பல்லாயிரகணக்கானோர் வேலைவாய்ப்பை இழக்கும் சூழ்நிலை உருவாகும் கீழ்க்கண்ட பிரச்சினைகள் பூதாகரமாக வெடித்துள்ளது.

வாய்பிருந்தும் சிக்கல்

நூல் விலை ஏற்றம் எந்த காரணமும் இன்றி ஒரு கிலோவிற்கு 50 ஏற்றம் கண்டுள்ளது. வருகிற ஜனவரி 2022 ஜெர்மன் பிராங்கபர்ட் நகரில் நடைபெறும் உலக பிரசித்தி பெற்ற வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சியில் நமது இந்திய குறிப்பாக கரூர் ஏற்றுமதியாளர்களுக்கு சீனாவின் பொருளாதார மந்தநிலை காரணமாக மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது. நூல் விலை ஏற்றத்தால் புதிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் அவர்கள் நம் நாட்டிற்கு வராமல் போகலாம் எனவே நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்.

5 சதவீதத்தை 12 சதவீதமாக உயர்த்தும் ஒன்றிய அரசு

ஜிஎஸ்டி வரி துணிகளுக்கும், டையிங் பிரிண்டிங் மற்றும் பல ஜவுளித் துறை சார்ந்த தொழில்களுக்கு 5 சதவீதமாக இருந்தது வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி ஜவுளித் துறை சார்ந்த பொருட்களுக்கு 12 சதமாக உயர்த்தும் ஒன்றிய அரசின் அறிவிப்பு ஜவுளித்துறை ஒரு பேரிடி ஆகும். இதன் மூலம் உள்நாட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் மிகப் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். 10% அதிகப்படியான மூலதனம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. உற்பத்தியை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி அதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவய்ப்பை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஒன்றிய அரசிற்கு அழுத்தம் கொடுத்து நூல் விலையை குறைந்தது ஒரு கிலோவிற்கு 25 ரூபாய் குறைக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள மில்களுக்கு நூல் விலையை குறைக்கவும் குறைந்தது மூன்று மாதங்களுக்கு மாற்றாமல் கடைபிடிக்கவும் அறிவுறுத்த வேண்டும். ஜவுளி பொருட்களுக்கு வரி என வெளியிப்பட்டிருக்கும் ஜிஎஸ்டி வரி உயர்த்தும் அறிவிப்பை திரும்பப் பெறும்படி ஒன்றிய அரசை வற்புறுத்த வேண்டும். எனவே இத்தொழிலை காப்பாற்றவும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு கிடைக்கவும் ஆவண செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

Related Posts

14987 மெ.டன் நெல் கொள்முதல்: விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது ரூ.36.60 கோடி

14987 மெ.டன் நெல் கொள்முதல்: விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது ரூ.36.60 கோடி

by karurxpress
June 26, 2025
0

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட...

போதைப் பொருட்கள் நடமாட்டம்:  புகார் செய்ய புதிய செயலி அறிமுகம்

மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க 50% மானியம்

by karurxpress
June 26, 2025
0

ஜூன்.26. சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை. கரூர் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ்...

குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்- எஸ்.பி.

குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்- எஸ்.பி.

by karurxpress
June 25, 2025
0

ஜூன்.25. கரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட எஸ்.பி.பெரோஸ் கான் அப்துல்லா தலைமையில்...

வழி நீட்டிப்பு செய்த மினி பஸ் சேவைகள் விபரம்

by karurxpress
June 24, 2025
0

ஜூன்.24. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள். தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிய விரிவான மினி...

Load More
  • Trending
  • Comments
  • Latest
கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

May 14, 2024
கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

May 20, 2024
வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

November 19, 2024
ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

April 26, 2025

கரூர் மாவட்ட திமுக முன்னோடிகள் 270பேருக்கு பொற்கிழி முப்பெரும் விழாவில் செந்தில்பாலாஜி வழங்கினார்

0

ரூ 750 கோடியில் காவிரியில் தடுப்பணை குளித்தலை அருகே அமைச்சர் ஆய்வு

0

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் கரூர் மாவட்டம் இரண்டாம் இடம்

0

இல்லாத நிறுவனத்தின் ஆய்வறிக்கை பெற்று இயங்கிய கல்குவாரிகளால் பல கோடி அரசுக்கு இழப்பு ஆலோசனை கூட்டத்தில் அதிர்ச்சி தகவல்

0

கோவை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும்

July 2, 2025
14987 மெ.டன் நெல் கொள்முதல்: விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது ரூ.36.60 கோடி

14987 மெ.டன் நெல் கொள்முதல்: விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது ரூ.36.60 கோடி

June 26, 2025
போதைப் பொருட்கள் நடமாட்டம்:  புகார் செய்ய புதிய செயலி அறிமுகம்

மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க 50% மானியம்

June 26, 2025
குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்- எஸ்.பி.

குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்- எஸ்.பி.

June 25, 2025
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved

No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved