• கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
Saturday, October 11, 2025
Karurxpress
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
Karurxpress
No Result
View All Result
Home மாவட்டம்

40 நாட்களுக்கு மேல் தலை மறைவாக இருந்த கரூர் விஜயபாஸ்கர் கேரளாவில் கைது

karurxpress by karurxpress
July 16, 2024
in மாவட்டம்
0
கரூர் விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு தள்ளுபடி
307
VIEWS

ஜூலை.16.

கரூரில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் சிலர் பத்திரப் பதிவு செய்ததாக மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் அளித்த புகாரில் கரூர் நகர காவல் நிலைய போலீசார் 7 நபர்கள் மீது 8 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தன்னையும் குற்றவாளியாக சேர்த்து போலீசார் கைது செய்ய கூடும் என்ற அச்சத்தில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கடந்த 40 நாட்களுக்கு மேல் தலைமறைவாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் விஜயபாஸ்கர் கடந்த 12ம் தேதி கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு கடந்த 25-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், 22 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர் எம் ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி சேகர் உள்ளிட்டோர் தன்னை அடித்து, உதைத்து போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்து பறித்துக் கொண்டதாகவும் அதை மீட்டுத் தரக்கோரி வாங்கல் நிலையத்தில் பிரகாஷ் என்பவர் புகார் மனு அளித்தார்.
இந்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி சேகர் உள்ளிட்ட 13 பேர்கள் ம 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில்,
தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் உடன் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டி உள்ளதால் தனக்கு இடைக்கால முன் ஜாமின் வழங்க கோரி மீண்டும் கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் முன்ஜாமீன் கோரி விஜயபாஸ்கர் மீண்டும் மனுதாக்கல் செய்தார். இதனிடையே விஜயபாஸ்கர் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர். இந்நிலையில் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கோர்ட் உத்தரவிட்டது. இதனிடையே உயர்நீதிமன்றத்தில் தனது தந்தைக்கு உடல் நலம் சரியில்லை உடன் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டும் எனவே முன்ஜாமின் தரக்கோரி விஜயபாஸ்கர் அவரது தம்பி சேகரும் மனு தாக்கல் செய்தனர். மனு விசாரணைக்கு வரும் என்கிற நிலையில் விஜயபாஸ்கர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

கரூரில் உள்ள கட்சி நிர்வாகிகளிடம் விஜயபாஸ்கர் இருக்கும் இடம் குறித்து சிபிசிஐடி போலீசார் கடந்த சில நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே கேரளாவில் விஜயபாஸ்கர் இருந்த இடத்தை போலீசார் கண்டுபிடித்து இன்று அவரை கைது செய்துள்ளனர்.

Related Posts

காரைக்குடி- கேஎஸ்ஆர். ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்

by karurxpress
October 10, 2025
0

கரூர், அக்.10. ரயில் எண்.06243. மைசூர் -காரைக்குடி (கே.எஸ்.ஆர்) பெங்களூரு, பங்காரப்பேட்டை, சேலம்,...

கோவை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் இயக்கத்தில் மாற்றம்: கட்சிகுடா ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்

by karurxpress
October 8, 2025
0

அக்.8.ரயில் சேவைகளில் மாற்றங்கள்  அக்டோபர் 10 & 13, 2025 அன்று அம்பாத்துரை மற்றும்...

நாகர்கோவில்- கோவை ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்

by karurxpress
October 2, 2025
0

அக்.2. திண்டுக்கல் ரயில்வே யார்டில் தண்டவாளப் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப்...

செங்கோட்டை- ஈரோடு ரயில் இயக்கத்தில் மாற்றம்

by karurxpress
October 2, 2025
0

அக். 2. மதுரை கோட்டத்தில் உள்ள சோழவந்தான்- மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே...

Load More
  • Trending
  • Comments
  • Latest
கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

May 14, 2024
கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

May 20, 2024
வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

November 19, 2024
ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

April 26, 2025

கரூர் மாவட்ட திமுக முன்னோடிகள் 270பேருக்கு பொற்கிழி முப்பெரும் விழாவில் செந்தில்பாலாஜி வழங்கினார்

0

ரூ 750 கோடியில் காவிரியில் தடுப்பணை குளித்தலை அருகே அமைச்சர் ஆய்வு

0

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் கரூர் மாவட்டம் இரண்டாம் இடம்

0

இல்லாத நிறுவனத்தின் ஆய்வறிக்கை பெற்று இயங்கிய கல்குவாரிகளால் பல கோடி அரசுக்கு இழப்பு ஆலோசனை கூட்டத்தில் அதிர்ச்சி தகவல்

0

காரைக்குடி- கேஎஸ்ஆர். ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்

October 10, 2025

கோவை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் இயக்கத்தில் மாற்றம்: கட்சிகுடா ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்

October 8, 2025

நாளை பாலக்காடு, திருச்சி ரயில் இயக்கத்தில் மாற்றம்

October 5, 2025
6ம் தேதி முதல் திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படும்

நாளை முதல் கரூர் புது பஸ் ஸ்டாண்டில் பேருந்துகள் இயக்கம்

October 5, 2025
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved

No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved