செப்.10.
பொறியியல் பணிகளை எளிதாக்குவதற்காக, 11.09.2025 அன்று இயக்கப்படும் ரயில் எண் 56809 திருச்சிராப்பள்ளி- ஈரோடு பயணிகள் ரயில், மற்றும் ரயில் எண் 16845 ஈரோடு செங்கோட்டை எக்ஸ்பிரஸ் மற்றும் ரயில் எண் 16846 செங்கோட்டை- ஈரோடு எக்ஸ்பிரஸ் ஆகியவற்றின் சேவைகளில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டது.
17.09.2025 அன்று மேற்கொள்ள திட்டமிடப்பட்ட பொறியியல் பணிகள் 12.09.2025 க்கு மாற்றப்பட்டுள்ளன. எனவே, 11.09.2025 அன்று இயக்கப்படும் ரயில் எண் 56809 திருச்சிராப்பள்ளி- ஈரோடு பயணிகள் ரயில், ரயில் எண் 16845, ஈரோடு- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் மற்றும் ரயில் எண் 16846 செங்கோட்டை- ஈரோடு எக்ஸ்பிரஸ் ஆகியவற்றின் சேவைகளில் எந்த மாற்றமும் இருக்காது; அன்று ரயில்கள் கால அட்டவணைப்படி இயங்கும்.
12.09.2025 அன்று, மேற்கூறிய ரயில்களின் சேவைகளில் மாற்றங்கள் இருக்கும், கீழே விவரிக்கப்பட்டுள்ளது. 1. திருச்சிராப்பள்ளி சந்திப்பு- ஈரோடு சந்திப்பு பயணிகள் ரயில், திருச்சிராப்பள்ளி சந்திப்பு காலை 07.20 மணிக்கு புறப்படும் இது செப்டம்பர் 12, 2025 அன்று கரூர் சந்திப்பு ரயில் நிலையத்தில் குறுகிய கால நிறுத்தப்படும். இந்த ரயில் திருச்சிராப்பள்ளியில் இருந்து கரூர் வரை மட்டுமே இயக்கப்படும், அன்று கரூர் சந்திப்பு- ஈரோடு சந்திப்புக்கு இயக்கப்படாது.
2. ஈரோட்டில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் எண் 16845 ஈரோடு சந்திப்பு- செங்கோட்டை எக்ஸ்பிரஸ், செப்டம்பர் 12, 2025 அன்று கரூர் சந்திப்பில் இருந்து மதியம் 3.05 மணிக்கு புறப்படுகின்ற ரயில் ஈரோட்டிலிருந்து கரூர் சந்திப்புக்கு இயக்கப்படாது. அன்று கரூர் சந்திப்பிலிருந்து புறப்பட்டு செங்கோட்டை வரை இயக்கப்படும். செங்கோட்டையிலிருந்து 05.10 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் எண் 16846 செங்கோட்டை- ஈரோடு சந்திப்பு எக்ஸ்பிரஸ், செப்டம்பர் 12, 2025 அன்று கரூர் சந்திப்பு ரயில் நிலையத்தில் குறுகிய நேரத்திற்கு நிறுத்தப்படும். இந்த ரயில் செங்கோட்டையிலிருந்து கரூர் சந்திப்புக்கு மட்டுமே இயக்கப்படும், அன்றைய தினம் கரூர் சந்திப்பு முதல் ஈரோடு சந்திப்பு வரை இயக்கப்படாது.
இத்தகவலை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.