• கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
Saturday, October 11, 2025
Karurxpress
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
Karurxpress
No Result
View All Result
Home கரூர்

3 ஆண்டுகளில் 23லட்சத்து 36ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன

karurxpress by karurxpress
September 24, 2025
in கரூர்
0
3 ஆண்டுகளில் 23லட்சத்து 36ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன
155
VIEWS

செப். 24.

கரூர் மாவட்டம், வெள்ளியணை அமராவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பசுமை தமிழ்நாடு தினம்’ நிகழ்ச்சி கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.

கலெக்டர் பேசுகையில், முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் பசுமை நிலப்பரப்பை உயர்த்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். குறிப்பாக நெகிழி இல்லா தமிழ்நாட்டை உருவாக்கி சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக “மீண்டும் மஞ்சப் பை” திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். 1450 நாவல் மரக் கன்றுகள் வனத்துறையினரால் நடவு செய்யப்பட உள்ளது. இன்று 250 நாவல் மரங்களை அமராவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடப்பட உள்ளது.

கரூர் மாவட்டத்தின் மொத்த புவியியல் பரப்பளவு சுமார் 2904 சதுர கி.மீ ஆகும். மாவட்டத்தின் வனப் பரப்பளவு 6720.81 ஹெக்டேர். தமிழ்நாட்டிலேயே மிகவும் குறைவான வனப்பரப்பளவை கொண்ட மாவட்டமாக கரூர் இருந்தாலும், வனம் மற்றும் காடுகள் இல்லாத பகுதிகளில் பசுமை நிலப் பரப்பை அதிகரிக்க கடந்த 3 ஆண்டுகளில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் மூலம் 23,36,303 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

வனத்துறையினரால் 12,68,762 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மாவட்டத்தில் வனம் மற்றும் மரங்களின் பரப்பளவு 6.24 ச.கி.மீ அதிகரித்துள்ளது. இது நடப்பு ஆண்டு இந்திய வன நிலை அறிக்கையில் மேலும் அதிகரிக்கக்கூடும். 2025-26 ஆம் ஆண்டு மாவட்டத்தின் மரக்கன்றுகள் நடுவதின் இலக்கு 9,77,255 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

வனத்துறையினரால் மட்டும் 4,38,500 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. பசுமை தமிழ்நாடு இயக்கத்தில் பங்கேற்பது மூலம். பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகள் என அனைவரும் இதில் ஈடுபட்டு. ஒவ்வொரு மரமும் நம்பிக்கையின் அடையாளமாகவும். பூமியின் பாதுகாப்பிற்கு பங்களிப்பாகவும் இருக்க வேண்டுமென கலெக்டர் தெரிவித்தார். கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி மாவட்ட வன அலுவலர் சண்முகம் கல்லூரி முதல்வர் முனைவர் உஷா ரவிச்சந்திரன் கலந்து கொண்டனர்.

Related Posts

நாளை பாலக்காடு, திருச்சி ரயில் இயக்கத்தில் மாற்றம்

by karurxpress
October 5, 2025
0

அக். 5. கரூர் - வீரராக்கியம் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில்...

6ம் தேதி முதல் திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படும்

நாளை முதல் கரூர் புது பஸ் ஸ்டாண்டில் பேருந்துகள் இயக்கம்

by karurxpress
October 5, 2025
0

அக்.5. கரூர் மாநகராட்சி, திருமாநிலையூர் கிராமம் கருப்பம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 12:14 ஏக்கர் பரப்பளவு...

6ம் தேதி முதல் திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படும்

6ம் தேதி முதல் திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படும்

by karurxpress
October 2, 2025
0

அக்.2. கரூர் மாநகராட்சி - திருமாநிலையூரில் புதிய பேருந்து நிலையம் ரூ.40.கோடி மதிப்பீட்டில்...

விஜய் கூட்டத்தில்  நடந்தது என்ன?. ஏடிஜிபி விளக்கம்

முதலமைச்சர் உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் எடுத்த போர்க்கால நடவடிக்கைகள்

by karurxpress
September 28, 2025
0

செப்.28. கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட துயர சம்பவத்தில் அரசு...

Load More
  • Trending
  • Comments
  • Latest
கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

May 14, 2024
கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

May 20, 2024
வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

November 19, 2024
ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

April 26, 2025

கரூர் மாவட்ட திமுக முன்னோடிகள் 270பேருக்கு பொற்கிழி முப்பெரும் விழாவில் செந்தில்பாலாஜி வழங்கினார்

0

ரூ 750 கோடியில் காவிரியில் தடுப்பணை குளித்தலை அருகே அமைச்சர் ஆய்வு

0

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் கரூர் மாவட்டம் இரண்டாம் இடம்

0

இல்லாத நிறுவனத்தின் ஆய்வறிக்கை பெற்று இயங்கிய கல்குவாரிகளால் பல கோடி அரசுக்கு இழப்பு ஆலோசனை கூட்டத்தில் அதிர்ச்சி தகவல்

0

காரைக்குடி- கேஎஸ்ஆர். ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்

October 10, 2025

கோவை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் இயக்கத்தில் மாற்றம்: கட்சிகுடா ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்

October 8, 2025

நாளை பாலக்காடு, திருச்சி ரயில் இயக்கத்தில் மாற்றம்

October 5, 2025
6ம் தேதி முதல் திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படும்

நாளை முதல் கரூர் புது பஸ் ஸ்டாண்டில் பேருந்துகள் இயக்கம்

October 5, 2025
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved

No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved