கரூர்.அக்.15.
கரூர் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகள், கஞ்சா குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 52 இரண்டு சக்கர வாகனங்கள். ஒரு மூன்று சக்கர வாகனம் மற்றும் 3 நான்கு சக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 56 வாகனங்கள் சட்டப்படியான அனைத்து அரசு நடைமுறைகளுக்கு பின்னர் கரூர் மாவட்ட ஆயுதப்படையில் வைத்து 24.10.2025ம்தேதி காலை 11.00 மணிக்கு பொது ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி வாகனங்களை கரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 23.10.2025ம்தேதி காலை 11.00 மணிமுதல் மாலை 05.00 மணி வரை நேரில் பார்வையிடலாம், பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், இரண்டாம் தளத்தில் உள்ள கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் தங்களது ஆதார் கார்டு நகல் அல்லது ரேஷன் கார்டு நகலுடன் காப்பு தொகையாக ரூ 1000/- செலுத்தி 23.10.2025ம் தேதி மாலை 05.00 மணிக்குள் தங்களது பெயரை பதிவு செய்து டோக்கன் பெற்றுக்கொள்ளவேண்டும்.
பதிவு செய்தவர்கள் மட்டும் ஏலத்தில் கலந்து கொள்ளலாம். வாகனம் ஏதும் ஏலத்தில் எடுக்கவில்லையெனில் செலுத்திய காப்புத்தொகையை ஏலம் முடிந்தவுடன் திருப்பி உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும். பொது ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு ஏலம் கோரும் நபருக்கு வாகனம் உள்ளது உள்ளபடியே விற்பனை செய்யப்படும். மேலும் உறுதி செய்யப்பட்ட வாகன ஏலத்தொகைக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (CGST – 9%) மற்றும் மாநில சரக்கு மற்றும் சேவை வரி (SGST 9%) உடன் சேர்த்து முழுவதையும் ரொக்கமாக செலுத்துவோருக்கு வாகனம் அன்றைய தினமே உள்ளது உள்ளபடியே என்ற நிலையில் ஒப்படைக்கப்படும்.
மேலும் தொடர்புக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு. கரூர் மாவட்டம் அவர்களின் அலுவலகத்தினை நேரடியாக தொடர்பு கொள்ளவும் என காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.