நவ.15 .
கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:- வடகிழக்கு பருவமழை பொதுவாக அக்டோபர் மாதம் இரண்டாம் பாதியில் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். பருவநிலை மாற்றத்தால் கனமழை, புயல் ஆகியவற்றால் வடகிழக்கு பருவமழை காலங்களில் அதிவேக புயல் எச்சரிக்கை விடுக்கப்படும் காலங்களில் புயலுக்கு முன் தேங்காய் இளநீரை அறுவடை செய்தல் மூலம் மரத்தின் பாரத்தினை குறைத்து மரங்கள் வேரோடு விழுவதைத் தவிர்க்கலாம்.
மரத்தின் கீழ் சுற்றில் உள்ள கணமான பழைய ஓலைகளை வெட்டி அகற்றுவது மூலம் மரத்தின் தலைப்பகுதியில் உள்ள சுமையை குறைத்து மரம் முறிவதை தவிர்க்கலாம். மரத்தின் அடிப்பகுதியை சுற்றி மண் அணைத்தல் மூலம் வேர் பகுதியை பாதுகாத்திடலாம், மேலும் நீர் தேக்கம் ஏற்படாமலும் தடுக்கலாம். முறையான வடிகால் வசதி ஏற்படுத்திட வேண்டும் ஆழமாக உழவு செய்தலை தவிர்க்க வேண்டும். ஆழமாக உழவு செய்வதால் வேர்கள் பாதித்து வேர் அழுகல் நோய் பாதிப்பு ஏற்படகூடும் தண்டு பகுதியில் அதிக ஈரப்பதம் காரணமாக பூஞ்சை மற்றும் பாசி வளர்வதை தடுக்க கண்ணாம்பு அடித்தல் வேண்டும்.
மரத்தின் கொண்டை பகுதியில் காணப்படும் பன்னாடை காய்ந்த மட்டைகள். குறும்பைகள் முதலியவற்றை தேங்காய் அறுவடை காலத்திலேயே தொடர்ந்து அப்புறப்படுத்த வேண்டும். மானாவரி தோப்புகளில் அங்காங்கு சிறு குழிகள் வெட்டி கிடைக்கப் பெறும் நீரை சேகரித்து நீர் மட்டத்தை அதிகரிக்கலாம். அதிக காற்று வீகம் நேரத்தில் மரம் எறுவதை தவிர்க்க வேண்டும். தற்காலிகமாக நீர் மற்றும் ரசாயன உரமிடுவதை தவிர்த்து இயற்கை உரங்களை இடலாம். ஈரப் பதத்தில் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். மரங்களுக்கு காப்பீடு செய்தல் மிக அவசியமாகும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.












