அக்.5.
கரூர் மாநகராட்சி, திருமாநிலையூர் கிராமம் கருப்பம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 12:14 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பேருந்து நிலையம் பணிகள் முழுவதுமாக முடிக்கப்பட்டு எதிர்வரும் 06.10.2125ம் தேதியன்று காலை 6.00 மணி முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது.
திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து புறநகர் பேருந்துகளும் இயக்கம் செய்யப்படவுள்ளது. மேலும் தற்சமயம் உள்ள பழைய பேருந்து நிலையத்திலிருந்து நகர பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும் எனவும், பொதுமக்கள் வசதிக்காக பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு 24 மணி நேரமும் நகர பேருத்துகள் வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் கரூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருமாநிலையூர் வழியாக இயக்கப்படும் அனைத்து நகர பேருந்துகளும் புதிய பேருந்து நிலையம் வந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே 06.10.2025ம் தேதியன்று காலை 6.00 மணி முதல் புறநகர் பேருந்துகள் கீழ்க்கண்டவாறு புதிய பேருந்து நிலையத்திற்கு இயக்கம் செய்யப்படவுள்ளது.
கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மார்க்கத்திலிருந்து கரூர் வரும் பேருந்துகள் வழக்கம்போல் பழைய பேருந்து நிலையும், லைட் ஹவுஸ், திருமாநிலையூர் வழியாக புதிய பேருந்து நிலையம் வந்தடையும், மீண்டும் அதே வழித்தடத்தில் திரும்ப செல்லும்.
மதுரை, திண்டுக்கல் பழனி (வழி அரவக்குறிச்சி) மார்க்கத்திலிருந்து வரும் பேருந்துகள் சுக்காலியூர் ரவுண்டானாலிலிருந்து செல்லாண்டிபாளையம் வழியாக புதிய பேருந்து நிலையம் வந்தடைந்து மீண்டும் அதே வழித்தடத்தில் திருப்ப செல்லும்.
திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல் (வழி: குஜிலியம்பாறை) மார்க்கத்திலிருந்து கரூர் வரும் பேருந்துகள் சுங்ககேட் திருமாநிலையூர் வழியாக புதிய பேருத்து நிலையம் வந்தடைந்து மீண்டும் அதே வழியில் திரும்பி செல்லும்.
புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரும்பொழுது அதற்குரிய பயணக்கட்டணங்கள் அரசாணையின்படி வசூலிக்கப்படும். என் கரூர் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.