பிப்.17..
சென்னை அரசு கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் புற்றுநோய் துறை தலைவர் மருத்துவர் சுப்பையா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஏ.பி.வி.பி.யின் முன்னாள் தலைவராக செயல்பட்ட மருத்துவர் சுப்பையா, அரசு ஊழியர்களுக்கான ஒழுங்கு நடத்தை விதிமுறைகளை மீறியதாக எழுந்த புகாரை அடுத்து மருத்துவ கல்வி இயக்குனரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
யார் இந்த சுப்பையா?.
அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகளை மீறியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சுப்பையா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுமட்டுமின்றி அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் செயலாளர் நிதி திரிவேதி மற்றும் அந்த அமைப்பினை சேர்ந்த மாணவர்கள் உட்பட சிலர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வீடு அருகே முன்னறிவிப்பின்றி நள்ளிரவில் திடீரென ஆர்ப்பாட்டம் செய்து கோஷங்களை எழுப்பினர். மேலும் கைது செய்ய முற்பட்டபோது போலீசாரை பணி செய்ய விடாமலும், முறைகேடாகவும் நடந்துகொண்டனர். போலீசாரை பணி செய்யாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்வாகிகளை டாக்டர் சுப்பையா சென்று சந்தித்துள்ளார். மேலும் இது தொடர்பாக இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தமிழக கவர்னரிடம் மனு கொடுக்க சென்றனர். அப்போது சுப்பையாவும் உடன் சென்றுள்ளார். இது தவிர சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் குடியிருந்துவந்த அபார்ட்மெண்டில் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் வயதான பெண்மணியுடன் ஏற்பட்ட தகராறில் அவரது வீட்டு முன்பு சென்று சிறுநீர் கழித்த புகைப்படங்கள் வைரலாகி சர்ச்சையில் சிக்கியவர் சுப்பையா என்பது குறிப்பிடத்தக்கது.