மும்பை அணியுடன் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே அணி மோச மான தோல்வி அடைந்தது. சிஎஸ்கே கேப்டன் தோனி தோல்விக்குப் பின் கூறுகையில் ” நாங்கள் டிபெண்ட் செய்ய முடியாத அளவுக்கு ரன்களை சேர்த்தோம். 2வது பாதி ஆட்டம் பனியின் தாக்கம் காரணமாக பந்துவீச்சில் தொய்வு ஏற்பட்டது. உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சிறந்த டெத்ஓவர் பந்துவீச்சாளர் பும்ரா, டெத்பந்துவீச்சை மும்பை அணி தொடக்கத்திலேயே கொண்டு வந்தது. எங்களால் சிறந்த தொடக்கம் கொடுக்க முடியவில்லை. பவர்ப்ளேயில் அதிக ரன்களும் அடிக்க முடியவில்லை. ஆயுஷ் மாத்ரே சிறப்பாக பேட் செய்தார்.
மும்பை வீரர்கள் சுழற்பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டனர். நாங்கள் இந்தத் தோல்வியை உணர்ந்து அடுத்து ஆடவேண்டும். இந்த தொடரில் வெற்றிகரமாக இல்லாவிட்டாலும் நாங்கள் நல்ல கிரி்க்கெட்டை விளையாடினோம், உணர்ச்சிவசப்படத் தேவையில்லை. நாங்கள் சரியான ஃபார்மில் கிரிக்கெட் விளையாடுகிறோமா அல்லது சரியான ஃபார்மில் இருக்கிறோமா என்பது அவசியம் ஆய்வுசெய்யப்பட வேண்டியது, இன்னும் அதிகமான ரன்கள் சேர்க்க வேண்டியது அவசியம். சில கேட்சுகள்தான் ஆட்டத்தை மாற்றும், பீல்டிங்கில் உள்ள குறைகளையும் களைய வேண்டும். நாங்கள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாவிட்டால் சரியான வீரர்கள் கலவையுடன் அடுத்த சீசனில் சந்திக்கலாம்” எனத் தெரிவித்தார்.