அக்.21
100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா வரலாறு படைத்ததையடுத்து டாக்டர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு பிரதமர் மோடி சென்றார் .அங்கு தடுப்பூசி மையத்தை பார்வையிட்டு டாக்டர்கள் மருத்துவ பணியாளர்கள், தடுப்பூசி செலுத்த வந்தவர்களிடம் உரையாடினார்.
பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், நாம் இந்திய அறிவியலின் மாண்பை, கூட்டு முயற்சியின், செயலாக்கத்தின் வெற்றியைக் கண்டு கொண்டிருக்கிறோம்.
இந்தியாவின் விஞ்ஞானம், சுறுசுறுப்பு, 130 கோடி மக்களின் உற்சாகமே சாதனைக்கு காரணம். கோடி தடுப்பூசி செலுத்திவிட்டோம். மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நன்றி. வேக்சின் செஞ்சுரிக்கு காரணமான ஒவ்வொருவருக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.