பிப்.27.
கன்று வீச்சு நோய் (Brocellosis) ப்ரூசெய்வா அபார்ட்(Brucella abortus) என்னும் துண்ணுயிரியினால் ஏற்படும் நோயாகும். இந்நோய் பாதித்த கால்நடைகள் கன்று வீச்சு மற்றும் மலட்டுத்தன்மை ஏற்பட்டு வாழ்நாள் முழுவதும் கன்று ஈனாத நிலை ஏற்படும். இந்நோய் கால்நடைகளுக்கு வராமல் தடுக்க கன்று வீச்சு நோய் தடுப்பூசி (ப்ரூசெல்யா ஊநீர்) மருந்துகள் கரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கால்நடை மருந்தகங்களுக்கும், கால்நடை மருத்துவமனைகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இது மாடுகளிலிருந்து பால் வழியாகவும் மற்றும் நேரிடையாகவும் மனிதனுக்கு பரவும் (Zoonotic Disease) நோயாகும். கன்று வீச்சு நோய் தடுப்பூசி கன்றுகளுக்கு போடுவதன் மூலம் கால்நடைகளுக்கு இந்நோய் வராமல் தடுக்கலாம். இத்தடுப்பூசி ஏற்கனவே கன்றுகளுக்கு நான்கு கட்டங்களாக போடப்பட்டுள்ளது. தற்போது ப்ரூசெல்யோசிஸ் தடுப்பூசி ஐந்தாம் கட்டமாக வரும் 20 பிப்ரவரி 2025 முதல் 19 மார்ச் 2025 வரை கரூர் மாவட்டத்தில் உள்ள கால்நடை நிலையங்கள் மூலம் அனைத்து கிராமங்களிலும் போடப்படவுள்ளது. இத்தடுப்பூசி 4-8 மாத வயதுடைய பெண் கன்றுகளுக்கு மட்டுமே போடப்பட வேண்டும்.
எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி இலவசமாக தங்கள் கன்றுகளுக்கு தடுப்பூசியை போட்டு பயனடையும்மாறு கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.