மே.3.
மதுரை கோட்டத்தின் திண்டுக்கல் மதுரை பகுதியில் உள்ள கொடைக்கானல் சாலை வாடிப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு / புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளைக் கருத்தில் கொண்டு, கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி ஒரு ரயில் சேவை பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை ரயில் நிலையத்திலிருந்து காலை 8.00 மணிக்கு புறப்படும் ரயில் எண்.16322 கோயம்புத்தூர் – நாகர்கோவில் ரயில், திண்டுக்கல் – நாகர்கோவில் இடையே 31.05.2025 வரை பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் கோவை ரயில் நிலையத்திலிருந்து திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு மட்டுமே இயக்கப்படும்; திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு 31.05.2025 வரை இயக்கப்படாது. இத்தகவலை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.