ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 57வது லீக் போட்டியில் கேகேஆர் அணியை எதிர்த்து சிஎஸ்கே அணிவிளையாடியதது. டாஸ் வென்ற கேகேஆர் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்களை சேர்த்தது. சிஎஸ்கே. நூர் அஹ்மத் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்பின் சிஎஸ்கே அணி ஆடியது. வைபவ் அரோரா வீசிய முதல் ஓவரிலேயே இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே டக் அவுட்டாகி வெளியேற, உடனடியாக உர்வில் படேல் வந்து முதல் பந்திலேயே சிக்ஸ் அடிக்க, அந்த ஓவரில் 8 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதன்பின் மொயின் அலி வர, அந்த ஓவரில் உர்வில் படேல் 6, 4, 6 என அடித்து நொறுக்கினார். ஆனால் அந்த ஓவரின் 5வது பந்தில் கான்வே டக் அவுட். எதிர்பாராத வகையில் அஸ்வின் களமிறக்கப்பட்டார். அவர் நிதானம் காட்ட, உர்வில் படேல் அதிரடியாக ஹர்சித் ராணா வீசிய 3வது ஓவரிலும் 6 அடிக்க, கடைசி பந்தில் வருண் சக்கரவர்த்தியின் அபார கேட்சால் உர்வில் படேல் 11 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அஸ்வினும் 8 ரன்களில் அவுட்.
வருண் சக்கரவர்த்தி வீசிய 6வது ஓவரில் ஜடேஜாவும் 19 ரன்களில் வெளியேறினார். இதனால் சிஎஸ்கே அணி 60 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் பிரெவிஸ் – சிவம் துபே கூட்டணி இணைந்தது.
சிவம் துபே நிதானமாக ஆட பிரெவிஸ் சிக்ஸ், பவுண்டரி என்று விளாசினார். வைபவ் அரோரா வீசிய 11வது ஓவரில் 6, 4, 4, 6, 6, 4 என்று 30 ரன்களை பிரெவிஸ் அதிர வைந்து பிரெவிஸ் 22 பந்துகளில் அரைசதம் அடித்த அசத்த, சிஎஸ்கே அணியின் ரன் எகிறியது. வருண் சக்கரவர்த்தி பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்று பிரெவிஸ் 25 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து சிவம் துபே – தோனி கூட்டணி இணைந்தது. இருவரும் நிதானமாக ரன்கள் சேர்க்க, சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு 5 ஓவர்களில் 40 ரன்கள் தேவையாக இருந்தது.
கடைசி 2 ஓவர்களில் சிஎஸ்கே வெற்றிக்கு 18 ரன்கள் தேவையாக இருந்தது. அப்போது வைபவ் அரோரா வீசிய 19வது ஓவரில் 10 ரன்கள் எடுத்த நிலையில் சிவம் துபே, நூர் அஹ்மத் ஆட்டம் இழக்க, வெற்றிக்கு கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்டது. ரஸ்ஸல் ஓவரின் முதல் பந்திலேயே தோனி சிக்ஸ் அடிக்க, 3வது பந்தில் 1 ரன் எடுக்கப்பட்டது. தொடர்ந்து, அன்சுல் கம்போஜ் பவுண்டரி அடிக்க சிஎஸ்கே 3 வது வெற்றியை பதிவு செய்தது. இந்த தோல்வியால் கேகேஆர் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது.
கடைசியில் ஒரு சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைத்த டொனி கூறியது-
ஒருவழியாக போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற அணியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த தொடரில் பல விஷயங்கள் எங்களுக்கு சாதகமாக நடக்கவில்லை. எனவே நிதர்சனமான விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். எந்த விஷயம் தவறாக போயிருக்கிறது என்பதை கண்காணித்து அதற்கான தீர்வை கண்டுபிடிக்க வேண்டும். தற்போது எங்களது அணியில் 25 வீரர்கள் இருக்கிறார்கள்.
அதில் எந்த வீரர்களை எந்த இடத்தில் நிரப்புவது என்பது குறித்து கவனம் செலுத்துகின்றோம். அடுத்த சீசனுக்கான விடையை தற்போது இருந்து நாங்கள் தேட ஆரம்பித்து விட்டோம்.
பேட்டிங்கில் எந்த வரிசையில் எந்த வீரர் சரியான இடத்தில் இருப்பார். எந்த பவுலர் சரியாக இருப்பார் என்பது குறித்து எல்லாம் பார்த்து வருகிறோம். சில சமயம் ரன்களை எடுக்காமல் ஆட்டம் இழந்து விடலாம்.
எனினும் ஆட முடியும் என்று நினைக்கும் ஷாட்டுகளை கண்டிப்பாக ஆட வேண்டும். வீரர்களுக்கு வலைப்பயிற்சி இல்லை. விளையாட வைத்து வாய்ப்பு தருவதை விட போட்டிகளில் அவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை பாரத்து, மன உத்வேகம். போட்டி விழிப்புணர்வு எப்படி என்பதை கண்டறிய விரும்புகின்றோம். பிரவீஸ் அபாரமாக விளையாடியதால் இறுதியில் கொஞ்சம் நெருக்கடி இல்லாமல் ஆடினோம்.
சிவம் துபே பொறுப்பான முறையில் இன்னிங்சை கட்டமைத்தார். தற்போது எனக்கு 43 வயது ஆகிவிட்டது. நான் பல ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி விட்டேன். ரசிகர்களுக்கு இதுதான் என்னுடைய கடைசி சீசனா என்று தெரியாது. வருடத்தில் வெறும் இரண்டு மாதங்கள் தான் விளையாடுகின்றேன். தற்போது இந்த ஐபிஎல் சீசன் முடிவடைந்த உடன் அடுத்த ஆறு முதல் எட்டு மாதம் வரை என்னுடைய உடல் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை பார்த்து தான் முடிவு செய்ய வேண்டும். இதனால் இப்போது முடிவு செய்ய வேறு எதுவும் இல்லை என்று தோனி கூறியுள்ளார்.