மார்ச்.31.
உலக தண்ணீர் தினத்தையொட்டி கரூர் மாவட்டத்தில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. தான்தோன்றி ஊராட்சி ஒன்றியம். மூக்கணாங்குறிச்சி ஊராட்சி விஜயபுரத்தில் கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் பார்வையாளராகக் கலந்து கொண்டார்.கலெக்டர் பேசியதாவது-
உலக தண்ணீர் தினத்தையொட்டி கரூர் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடத்தப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை 2025 ஆம் ஆண்டிற்கான உலக தண்ணீர் தினத்தினை பனிப்பாறை பாதுகாப்பு என்கிற சிறப்பு கருப்பொருளினை அடிப்படையாகக் கொண்டு இன்றைய கூட்டம் நடத்தப்படுகிறது. மேலும், தற்பொழுது கோடைகாலம். வெயில் காரணமாக உண்டாகும் சின்னம்மை தட்டம்மை, பொன்னுக்கு விங்கி போன்ற நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்ள நீர் சார்ந்த உணவு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள அதிக அளவியான நீர் பருக வேண்டும். தாகம் இல்லை என்றாலும் போதிய அளவிலான நீர் பருக வேண்டும். சூடான பானங்கள் மற்றும் குளிர்பானங்கள் பருகுவதைத் தவிர்த்து அதிக அளவில் மோர். இளநீர், உப்பு மற்றும் மோர் கலந்த அரிசிக் கஞ்சி, உப்பு ககந்த எலுமிச்ை பழச்சாறு ஆகியவற்றைப் பருகலாம்.
இன்றைய தினம் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் வான்தரும் மழைநீரினை சேகரித்தல் சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்துதல் உடைந்த குழாய்களை சரிசெய்து நீர் வீணாகாமல் பாதுகாத்தல். மறுசுழற்சிக்கு உட்படுத்துதல், நிலத்தடி நீரை செறிவூட்டுதல் நீரின் தூய்மையை பாதுகாத்தல் மற்றும் நீ மா பாட்டைத் நடுத்தல், மரம் வளர்த்தலை ஊக்குவித்தல். வீட்டுக்கொரு மரம் வளர்த்தல் நிலைகளின் ஆக்கிரமிப்பை அகற்றி
புனரமைத்தங் நீர் நிலைகளில் தண்ணீர் சேகரமாக உரிய கால்வாய்களை தூர்வாரி புனரமைத்தல், நீரின் முக்கியத்துவத்தை குழந்தைகள், பெரியவர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் எடுத்துக் கூறுதல் உள்ளிட்ட பொருண்மைகள் குறிந்து விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக கிராம ஊராட்சியில் செயல்பாட்டில் இருக்கும் மற்றும் புதிதாக செயல்படுத்தப்படும் கூட்டுக் குடிநீர் திட்டங்களின் செயல்பாடு மற்றும் திட்டத்தின் முழுமையான விவரத்தினை கிராம சபையில் விரிவாக பொதுமக்களுக்கு எடுத்துரைத்தல் கள ஆய்வு கருவிகளை பயன்படுத்தி 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீரின் தரத்தினை ஆய்வு செய்து உரிய பதிவேட்டில் பதிவு செய்தல் வீடுதோறும் குடிநீர் வழங்கப்பட்ட ஊராட்சி என்ற நிலைக்கு மேம்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை உறுதி செய்தல், கிராம ஊராட்சியில் உள்ள பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு பொது கட்டிடங்கள் அணைத்திலும் குழாய் இணைப்புகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்தல். அனைத்து மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளிலும் குகோரின் கலப்பான் கருவிகளை பொருத்தி குடிநீரில் குளோரின் கலப்பதை உறுதி செய்தல் உள்ளிட்ட பொருண்மைகள் குறித்தும் வியாதிக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த பண்ணை மற்றும் பண்னா சாரா வாழ்வாதார நடவடிக்கைகளில் சொட்டு நீர்ப் பாசனம், தெளிப்பு நீர்ப் பாசனம் மற்றும் மழைத்தூவுவான் போன்ற நுண்ணீர்ப் பாசன முறைகளை பின்பற்றுவது குறித்தும். கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு உள்ளிட்ட பொருண்மைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், இன்றைய தினம் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீத குடிரர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது குறித்தும் உள்ளிட்ட பல்வேறு பொருள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என கலெக்டர் தெரிவித்தார்.
முன்னதாக கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதி மொழியினை அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் எடுத்துக்கொண்டனர மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் மரு. சாந்தி, வேளாண்மை இணை இயக்குநர் சிவானந்தம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தேன்மொழி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரியா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சரவணன் கலந்து கொண்டனர்.