கரூர், ஜூன்.22.
கரூர் மாவட்டம், புகளூர் வட்டம் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர், பி. ராஜா, கள ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் .எம்.சாய்குமார் தலைமையில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.இளங்கோ, முதன்மை காவல்துறை விழிப்புணர்வு அலுவலர் பண்டிகங்கதர், முன்னிலையில் ஆய்வு நடைபெற்றது.
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரையின்படி இன்று கரூர் மாவட்டத்தில் உள்ள புகளூர் தமிழ்நாடு செய்திதாள் காகித ஆலையின் உள்ள அனைத்து மூத்த அதிகாரிகளுடன் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டோம். மிகச்சிறப்பான பணியினை இங்குள்ள பணியாளர்கள் மேற்கொண்டுள்ளார்கள். உலகத்தரம் வாய்ந்த காகிதங்களை இங்கு தயார் செய்து வருகிறோம். இதனை துரிதப்படுத்தி மேம்படுத்தி அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கு மிக அதிக வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இந்த செய்திதாள் காகித ஆலையில் ஆய்வு செய்த முடிவுகளின் விபரத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் தெரிவித்து அதற்குப் பின்பு அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
செய்தித்தாள் காகித ஆலையை பொறுத்தவரை உலகத்திலேயே சிறப்பான ஒரு ஆலை என்று உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்கள் இதற்கு அத்தாட்சி கொடுத்துள்ளன. காகித ஆலையினை இன்னும் மென்மேலும் மேம்படுத்துவது துறையின் முக்கிய நோக்கம் என அமைச்சர் முனைவர் டி. ஆர். பி.ராஜா தெரிவித்தார்.
முன்னதாக நிர்வாக அலுவலக கட்டடத்தில் காகித ஆலை நிர்வாக செயல்பாடுகள் உற்பத்தி ஆலை விரிவாக்க பணி, வனத்தோட்ட ஆராய்ச்சி மேம்பாட்டு ஆலை. விற்பனை துறை செயல்பாடு முன்னேற்றங்கள் குறித்தும். காகிதக் கூழ் உற்பத்தி குறித்து அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு தொடர்ந்து காகித ஆலைகளில் செயல்பாடுகள் குறித்தும் மற்றும் வனத்தோட்டம் ஆராய்ச்சி மேல்பாட்டு ஆலைகளின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன விருத்தினர் இல்ல வளாகத்தில் அமைச்சர் மரக்கன்று நடவு செய்தார்.
இந்திகழ்வில் புகளூர் நகராட்சி தலைவர் குணசேகர், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன பொது மேலாளர்கள் கலைச்செல்வன் (மனித வளம்). .கிருஷ்ணன்(செயல் இயக்குனர்) . சீனிவாசன் (வனதோட்டம்) மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.