பிப்.8.
நீட் விலக்கு சட்ட முன்முடிவு தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பாஜக தவிர அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தனர். மசோதா இன்று ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
நீட் தேர்வு விலக்கு தொடர்பான சட்ட முன்வடிவை ஆளுனர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில் மீண்டும் நீட் விலக்கு சட்ட முன்வடிவை முன்மொழிந்து சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது-
ஏழை மாணவர்களை கொல்லக்கூடிய தேர்வு தான் நீட். அரசியல் சட்டம் பாகுபாடு கூடாது என்கிறது ஆனால் நீட்தேர்வு பாகுபாட்டை உருவாக்கி பணக்கார நீதியை பேசுகிறது. சில மாணவர்களை கல்லறைக்கும் சில மாணவர்களை சிறைச்சாலைக்கும் அனுப்பிய நீட் தேர்வு தேவையா?. தேர்வர்களுக்கு நேரடியாக லோ, அல்லது மறைமுகமாக முறைகேடுகள் நடைபெற உதவுதல், தேர்வெழுத மாற்று நபர்களை பயன்படுத்துதல், போலிச் சான்றிதழ்களை பயன்படுத்துதல், நவீன தொழில்நுட்பசாதனங்களை பயன்படுத்தி மதிப்பெண்களில் திருத்தம் செய்தல், இரட்டைக் குடியிருப்பு முறையைப் பயன்படுத்துதல், தேர்வு அமைப்பாளருக்கு லஞ்சம் கொடுப்பது போன்ற பல்வேறு முறைகேடுகள்,
இழந்த இடங்கள்
நடப்பு கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முதன்மைத் தேர்வர்களை விட மீண்டும் மீண்டும் பயிற்சி மையங்களுக்கு செல்லும் மறுதேர்வர்களே அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நீட் தேர்வுக்கு முன்பு மறு தேர்வர்களின் சராசரி சேர்க்கை விகிதம் 8.12 சதவீதம். நீட் தேர்வுக்கு பின்பு 2020 – 21 ஆம் ஆண்டு வாக்கில் அது 71.42 சதவீதமாக அதிகரித்துள்ளது. முதன்முறை தேர்வுகளில் நீட்டுக்கு முந்தைய காலத்தில் சராசரி சேர்க்கை விகிதம் 91.87 என்பதில் இருந்து 2020-21 ல் 28.58ஆக குறைந்துள்ளது.
பொதுப் போட்டியில் எஸ்சி பிரிவினர் எவ்வித பங்கையும் பெறவில்லை. சமூகத்தில் பின்தங்கிய பிரிவினர் பாதிக்கப்பட்டிருப்பது நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நீட் விலக்கு சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டியது ஆளுநரின் கடமை. 2வது முறையாக நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவை காலம் தாழ்த்தாமல் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு ஆளுநர் அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.