பிப்.10.
தமிழக அரசு பொது சுகாதாரத்துறையின் சார்பாக 10.02.2025 அன்று தேசிய குடற்புழு நீக்க முகாம் நடைபெற உள்ளது. அதில் விடுபட்ட குழந்தைகளுக்கு மீள 17.02.20025 அன்று குடற்புழு நீக்க மருத்து வழங்கப்பட உள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக குடற்புழு நீக்க மாத்திரைகள் 1வயது முதல் 19 வயதிற்குட்பட்ட (மொத்தம் 210236) மற்றும் 20-30 வயதுடைய 80627 பெண்கள் (காப்பிணிப் பெண்கள் பாலூட்டும் தாய்மார்கள் தவிர்த்து) பிற குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு அங்கன்வாடி மையங்கள். துணை சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் குழந்தைகளுக்கு வைட்டமின் மற்றும் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவது தடுக்கப்படும். இரத்த சோகை குறைபாடு வராமல் தடுக்க முடியும். குடற்புழு தாக்கத்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மாணவ மாணவிகளின் பள்ளி வருகை பாதிக்கப்படாமல் தவிர்க்கப்படும். இதனால் மாணவ மாணவியர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவதோடு விளையாட்டு போன்ற இதர நடவடிக்கைகளிலும் அதிக ஊக்கம் மற்றும் புத்துணர்வுடன் பங்கேற்க ஏதுவாக இருக்கும்.
பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளுக்கு பணியாளர் மூலமாக அங்கன்வாடி மையத்திற்கு அழைத்து வந்து குடற்புழு நீக்க மருந்து வழங்கப்பட உள்ளது. ஒரே நேரத்தில் ஒட்டு மொத்த சமுதாயத்தில் இந்த குடற்புழு நீக்க மருந்தினை உட்கொள்ளுவதால் சுற்றுப்புறத்தில் குடற்புழு எண்ணிக்கை குறைகிறது
இந்தியாவில் ஊட்டசத்து குறைபாடு மற்றும் ரத்தசோகையினால் 6- 53 மாத குழந்தைகளில் 73 சதவிகிதம், 15-40 வயதினரிடையே 36 சதவிகித பெண்களும், 30 சதவிகித ஆண்களும், குறிப்பாக கிராமப்புற குழந்தைகள் மறனறபாதிக்கப்படுகின்றனர்.
5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 33 சதவிகிதம் குழந்தைகள் உடல் வளர்ச்சி குன்றியும். 36 சதவிகிதம் குழந்தைகள் எடை குறைவாகவும் உள்ளனர். மேற்குறிப்பிட்ட குறைபாடுகள் அனைத்தும் இந்த மருந்து உட்கொள்வதன் மூலம் வராமல் தடுக்கப்படுகிறது. எனவே 1 வயது முதல் 19 வயதிற்குட்பட்ட சிறுவர்சிறுமியும் மற்றும் 20 -30 வயதுடைய பெண்கள்( கர்ப்பிணிப் பெண்கள் பாலூட்டும் தாய்மார்கள் தவிர்த்து பிற பெண்களுக்கு) அனைவரும் தவறாது இந்த மருந்தை உட்கொண்டு பயன்பெற வேண்டும் என கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.