பிப்.2.
சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிர மணியன் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது திடீர் ஆய்வுகளை மேற்கொள்வதும் உடற்பயிற்சி செய்வது வழக்கம். ஈரோடு இடைத்தேர்தல் பணிக்காக வந்திருப்பதால் ஆய்வு இயலாது. அங்குள்ள ஒரு கிணற்றில் குதித்து அமைச்சர் குளிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
தேர்தல் நடத்தை விதிகள் அமுலிலிருப்பதால் ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட மருத்துவமனைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளல்,திட்டங்கள் செயல்படுத்துதல் முடியாது.ஆனாலும் பவானி – வேதகிரி மலையிலும்,கிரிவலப்பாதையிலும் WALKING மற்றும் TREKKING ம் சென்று மக்களின் மருத்துவ கட்டமைப்பை கேட்டறிந்ததாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.