மார்ச்.28.
கரூர் மாவட்டத்தில் கோடைவெயில் தொடக்கத்திலேயே அதிக வெப்பம் இருந்து வருவதால் பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி மாவட்ட கலெக்டர் தங்கவேல் கீழ்கண்டவாறு தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றிடுமாறு தெரிவித்துள்ளார்.
வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க செய்யவேண்டியவை/வெயிலில் இருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகள்-
உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் எடுக்காவிடிலும் கூட போதுமான அளவு தண்ணீர் அருந்தவும். ஓஆர்எஸ். எலுமிச்சை ஜூஸ், இளநீர் வீட்டில் தயாரித்த நீர்மோர். லஸ்ஸி, புளித்த சோற்று நீர், பழச்சாறுகள், பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் மீட்டில் சமைத்த உணவுகளை உட்கோள்ள வேண்டும். முடிந்தவரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்க வேண்டும். தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.
வெளியில் செல்லும் போது காலணிகளையும், மதிய நேரத்தில் கண்ணாடி குடையின் பாதுகாப்புடன் செல்ல வேண்டும். கூடுமானவரை முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 3.00 மணிவரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
குழந்தைகளுக்கான வழிமுறைகள்
குழந்தைகளை வாகனங்களில் தனியே அமர்த்திவிட்டு செல்லக் கூடாது. பருக இளநீர் போன்ற திரவங்களை கொடுக்க வேண்டும். வெப்ப தொடர்பான நோய்களை எவ்வாறு கண்டறிய வேண்டும் என்பதை அறிந்துகெள்ள வேண்டும். குழந்தைகளின் சிறுநீரை சோதித்துப் பார்க்கவும். மஞ்சள் நிறமுள்ள சிறுநீர்நிரிழப்பை குறிக்கலாம்.
முதியவர்களுக்கான வழிமுறைகள்-
தனியே வசிக்கும் முதியவர்களின் உடல்நிலையை தினமும் இருமுறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். முதியவர்களின் அருகாமையில் தொலைபேசி இருப்பதை உறுதிப்படுத்தி, வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக தோன்றினால், ஈரமான துண்டுகளால் கழுத்து மற்றும் கைகளில் துடைக்க வேண்டும். போதிய இடைவேளைகளில் நீர் அருந்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
கால்நடைகளுக்கான குறிப்புகள்-
கால்நடைகளை நிழல் தரும் பகுதியில் இருக்க செய்து போதுமான அளவு தண்ணீர் வழங்க வேண்டும். தீவனங்களை வெட்ட வெளியில் போட வேண்டாம். அடைக்கப்பட்ட இடத்தில் கால்நடைகளை கட்ட வேண்டாம். பறவைகளுக்கு போதுமான நிழற்கூரைகள் அமைத்துக் கொடுத்து போதுமான நீர் கொடுக்க வேண்டும். செல்லப்பிராணிகளை வெயில் காயங்களில் வாகனங்களில் தனியே விட்டுச் செல்லக்கூடாது. மேலும், பருவநிலை மாற்றங்களினால் இந்தாண்டு கோடை வெயில் துவக்கத்திலேயே வெப்பம் அதிகமாக உள்ளதால் மாடி வீடுகளிலும், கூரை வீடுகளிலும் உள்ள மின் ஒயர்கள் உருகி சார்ட் சர்க்யூட் ஏற்பட்டு அதில் தீப்பொறியினால் எளிதில் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது. மேலும் மாடிவீடுகளில் மேல் கூரைகளில் ஏற்படும். அதிக வெப்பத்தினால் வீட்டின் உள்ளே மேல்புறம் உள்ள இரும்புகள் சூடாகி மின்விசிறி டியூப்லைட் கழன்று கீழே விழும் தன்மையை பெறுகின்றன. கூரை வீடுகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விலை உயர்ந்த பொருட்கள். நில ஆவணங்கள் சான்றிதழ்களை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம்.. கேஸ் சிலிண்டர்களை இரவில் கழற்றி வைப்பது நல்லது. விறகு அடுப்புகளை பயன்படுத்திய பிறகு தண்ணீர் ஊற்றி அனைத்து விட வேண்டும். மண்ணென்ணை விளக்குகளை கவனமாக கையாள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.