ஆக.21.
கரூர் பசுபதிபாளையத்தைச் சேர்ந்தவர் பா.கி தங்கராஜ். தங்கராஜ் -வசந்தி ஆகியோரின் மகள் பிரியங்கா டெல்லி நொய்டாவில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். டெல்லியில் தொழிலதிபர் அஹமத் ஜெமீல் கயான் என்பவருக்கும் பிரியங்காவும் காதல் ஏற்பட்டது. அஹமத் துருக்கி நாட்டைச் சேர்ந்தவர். டெல்லி மற்றும் துருக்கியில் தொழில் அதிபராக உள்ளார். இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு தமிழ் முறைப்படி நேற்று பசுபதிபாளையத்தில் எளிமையாக நடைபெற்றது. மாப்பிள்ளை அழைப்பு போன்ற சம்பிரதாயங்களுடன் தாலி கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ் தெரியாத மணமகன் வீட்டாருக்கு ஒவ்வொரு நிகழ்வுகளும் ஆங்கிலத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. திருமண நிகழ்வுகளை மாப்பிள்ளை வீட்டார் வீடியோவில் பதிவு செய்து மகிழ்ந்தனர்.