வருமானவரித்துறை சோதனை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியது-

ரைடு நடத்த சென்ற அதிகாரிகள் வீட்டின் காம்பவுண்ட் சுவரில் ஏறி அதிகாரிகள் உள்ளே சென்ற வீடியோ எனக்கு வந்துள்ளது, இதற்கு என்ன அவசியம்.
எத்தனை நாட்கள் சோதனை நடத்தினாலும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்புத் தரப்படும்”
என் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெறவில்லை- எனது தம்பி மனைவி வீடு கட்டி வருவது குறித்து ஏற்கனவே திட்டமிட்டு அவதூறு பரப்பினார்கள்..
ரெய்டு நடத்திய அதிகாரிகளுடன் ஏற்பட்ட வாக்குவாதம் குறித்து ஆர்.எஸ்.பாரதி விளக்கம் அளித்துவிட்டார். வேலு மணி ரைடு நடைபெறும்போது சாமியான பந்தல் போட்டு கூட்டத்தை கூட்டி தொடர்ந்து சாப்பாடு வழங்கியது போல் இங்கு எதுவும் நடைபெறவில்லை.
வருமான வரித் துறை சோதனைகள் எனக்கும் திமுகவுக்கும் புதிதல்ல- சோதனையை நேர்மையாக எதிர்கொள்வேன் .விரும்பத்தகாத நிகழ்வு நடைபெற்றதற்கு வருமான வரித்துறையே காரணம்
2006 ஆம் ஆண்டுக்குப் பிறகு எனது பெயரிலோ, எனது குடும்பத்தினர் பெயரிலோ எந்த சொத்தும் வாங்கவில்லை” என்றார்.