பிப்.2.
பொதுமக்களின் நலன் கருதி அதிக குடும்பங்களை கொண்ட கிராமங்கள் /குக்கிராமங்கள் குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு பொருளாதார மற்றும் ஒழுங்கான ஒருங்கிணைந்த சாலை போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக சிற்றுந்து வாகனத்திற்கான புதிய விரிவான திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் வழிக்காட்டு நெறிமுறைகள் அடங்கிய முக்கிய அம்சங்கள்.
அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தின் நீளம் 25 கி.மீ ஆக இருக்க வேண்டும். குறைந்தப்பட்ச சேவை செய்யப்படாத பாதை நீளம் (Unserved Route Length) சாலையின் மொத்த பாதை நீளத்தில் 65% க்கு குறைவாக இருக்கக்கூடாது.
தொடக்கப்புள்ளி / முனையப் புள்ளி என்பது சேவை செய்யப்படாத குடியிருப்பு /கிராமத்தில் ஏதேனும் ஒன்றாக இருக்க வேண்டும். புள்ளிகளில் ஒன்று பேருந்து நிறுத்தம் அல்லது பேருந்து நிலையம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்க வேண்டும்.
முனையப்புள்ளியில் இருந்து அடுத்த 1 கி.மீ தூரத்தில் அரசு மருத்துவமனை. மேல்நிலைப்பள்ளி, கல்லூரி, இரயில் நிலையம், உழவர் சந்தை, வேளாண். ஒழுங்குமுறை சந்தை, ஆட்சியர் அலுவலகம், தாலுக்கா அலுவலகம் புகழ் பெற்ற வழிபாட்டு தலங்கள் அல்லது பேருந்து நிலையத்திற்கு சற்று முன்பு அமைய நேரிடும் பட்சத்தில் ஒட்டுமொத்த வழங்கப்பட்ட வழித்தடத்தில் Served Route அனுமதிக்கப்பட்ட பாதை நீளத்தை விட அதிகமாக இருக்கும்தேர்வில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி, அரசு போக்குவரத்து கழகங்கள், உள்ளாட்சி அமைப்புகள். வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுடன் கலந்தாலோசித்து மேற்கூறிய தேவைப்படும் இடங்களுக்கு பயணிகள் சென்றடைய உதவும் வகையில், சேவை பகுதியில் 1 கி.மீ வரை கூடுதல் துரத்தை அனுமதிக்கலாம். மேற்கூறிய இடங்களை தவிர மற்ற இடங்களுக்கு இது பொருந்தாது.
பழைய சிற்றுந்து திட்டத்தின் கீழ் ஏற்கனவே அனுமதி பெற்ற உரிமையாளர்கள் இப்புதிய திட்டத்தின்கீழ் மாறுவதற்கு விருப்பத்தினை எழுத்துப் பூர்வமாக அளித்து அனுமதிசீட்டினை ஒப்படைக்க வேண்டும். இப்புதிய வழித்தடத்தில் குறைந்தப்பட்சம் 1.5 கி.மீ கூடுதல் சேவை செய்யப்படாத பாதை இருக்க வேண்டும். 1989 -ம் வருடத்திய தமிழ்நாடு மோட்டார் வாகன விதிப்படி சிற்றுந்து வாகனத்தின் இருக்கைகள் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருக்கைகள் தவிர்த்து 25 ஆக இருக்கவேண்டும். மேலும் வாகனத்தின் Wheel Base 390 Cm க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
நிலைப் பேருந்து அல்லது சிற்றுந்து இயக்கப்படும் வழித்தடத்தின் ஒருபகுதி அல்லது போதுமானதாக இல்லாத வழித்தடங்களில் பொதுமக்கள் பயணம் மேற்கொள்ளும் வாகன இயங்கங்களில் (Trips) எண்ணிக்கை நாளொன்றுக்கு 4 நடைகளுக்கு குறைவாக உள்ளதை சேவை செய்யப்படாத (Unserved Routes) பாதையாக கருதப்படும்.
கரூர் மாவட்டத்தில் இந்த சிற்றுந்து புதிய விரிவான திட்டத்தின் கீழ் வழித்தட வரைபடங்களுடன் கூடிய விண்ணப்பங்களை நிபந்தனைகளுக்குட்பட்டு பொதுமக்கள். மக்கள் பிரதிநிதிகள். தனியார் அமைப்புகள் மற்றும் பேருந்து உரிமையாளர்கள். செயலாளர் / வட்டாரப் போக்குவரத்து அதிகாரியிடம் கரூர். சமர்ப்பிக்கலாம் என கரூர் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி /மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.