• கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
Thursday, November 13, 2025
Karurxpress
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
Karurxpress
No Result
View All Result
Home மாவட்டம்

தரமற்ற சாலை என பொய்பரப்பிய கும்பல்: வெளுத்து வாங்கிய கலெக்டர்

karurxpress by karurxpress
October 9, 2023
in மாவட்டம்
0
தரமற்ற சாலை என பொய்பரப்பிய கும்பல்: வெளுத்து வாங்கிய கலெக்டர்
131
VIEWS

அக்.8.

கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றியம் தரங்கம்பட்டி முதல் வீரசிங்கம்பட்டி தார்சாலையினை புணரமைக்கும் போது தரமற்ற சாலையாக போடப்பட்டு இருப்பதாக சமூக வலைதளங்களில் பொய்யான தகவல் அடிப்படையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தார் சாலையின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்ட போது pic.twitter.com/v8ycwFkoiT

— Collector Karur (@CollectorKarur) October 8, 2023

கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் (MGSMT) கீழ் தரகம்பட்டி முதல் வீரசிங்கம்பட்டி வரை உள்ள தார்சாலையை புணரமைத்தல் பணி மேற்கொள்ள செயல்முறைகளில் நிர்வாக அனுமதி வழங்கி, ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு வரப்பெற்ற ஒப்பந்தப்புள்ளிகளில் குறைந்த விலைப்புள்ளி அளித்த +M/S. Chinnammalஎன்ற நிறுவனத்திற்கு செயல்முறைகளின்படி வேலை உத்தரவு வழங்கப்பட்டது.

மேற்படி வேலை உத்தரவு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து பேட்ஜ் ஓர்க் முடித்து (06.10.2023) வெள்ளிக் கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை 1050 மீட்டர் மட்டும் தார்சாலை போடப்பட்டது. தார்சாலை போடப்பட்டு முழுமையாக செட் ஆவதற்கு 48 மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை ஆகக்கூடிய சூழ்நிலையில், வீரசிங்கம்பட்டி குக்கிராமத்தில் இறுதியாக தார்சாலை மாலை 6.00 மணிக்கு முடிக்கப்பட்ட இடத்தில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் தார்சாலையை சேதப்படுத்தியுள்ளனர்.

ஒப்பந்ததாரர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் சமூக ஊடகங்கள் மற்றும் வலைதளங்களில் தவறான வீடியோக்களை பதிவிட்டு உண்மைக்கு புறம்பான அதாவது தார்சாலை தரம் இன்றி இருப்பதாக தவறான கருத்துக்களை பரப்பி மாவட்ட நிர்வாகத்திற்கும், அரசிற்கும் அவப்பெயரை ஏற்படுத்தினர்.

ஏதோ இவர்கள் பொறியாளர்களைப் போல சாலை பெயர்ந்து விட்டது என வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவ விட்டனர்.

இது பற்றி அறிந்ததும் கரூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் பிரபு சங்கர் இன்று அப்பகுதிக்கு அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். இரண்டு ஒப்பந்ததாரர்களிடம் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த நாடகத்தை நடத்தி இருப்பதும் தெரிய வந்தது. ரோடு போட்ட உடனேயே அதை பெயர்த்து எடுத்தால் தோசை போல மட்டுமல்ல இட்லி போலவும் வரும். வேலையில் ஏதாவது குறைபாடு இருந்தால் அதிகாரிகளிடம் புகார் செய்ய வேண்டும். யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற அவதூறு பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சாலையின் நரம் குறித்து ஆய்வு செய்திட போடப்பட்ட சாலையில் சேதப்படுத்திய இடத்திற்கு அருகில் நீளம் + அகலம் 10 செ.மீ.+ 10 செ.மீ. மற்றும் ஆழம் 3.0 செ.மீ. என்ற அளவில் வெட்டி எடுக்கப்பட்ட போது ஆழம்
35 செ.மீ. இருப்பது தெரியவந்தது. இதன்படி கூடுதலாக தார்சாலையின் கனம் 0.5 செ.மீ. இருந்தது தெரியவந்தது. வெட்டி எடுக்கப்பட்ட தார்சாலையின் மூலப்பொருட்கள் (தார் மற்றும் ஜல்லி) கெட்டி எடுத்து பயன்படுத்தப்பட்ட தாரின் அளவு மற்றும் ஜல்லி ஆகியவற்றின் அளவு பரிசோதனை செய்யப்பட்டது. 5.4% தார் இருக்க வேண்டிய இடத்தில் 5.5% இருந்தது. மூலப்பொருட்கள் தர ஆய்வு செய்யப்பட்டதின் அடிப்படையில், சாலை தரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. அரசு பொது சொத்துகளை சேதப்படுத்திய நபர்கள் மீது காவல் துறை மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்தார்.

திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை. வாணிஈஸ்வரி, கடவூர் ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள். ஒப்பந்ததாரர் மற்றும் வீரசிங்கம்பட்டி ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Related Posts

பராமரிப்பு பணிகள்: மாற்றுப் பாதையில் இயக்கப்படும் ரயில்கள்

by karurxpress
November 13, 2025
0

நவ‌.13பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ரயில் சேவைகள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும். நவம்பர் 13 &...

ஹூப்பள்ளி- ராமநாதபுரம்- ஹூப்பள்ளி ரயில் சேவை நீட்டிப்பு

by karurxpress
November 3, 2025
0

நவ.3. கர்நாடகாவில் உள்ள ஹுப்பள்ளி - ராமநாதபுரம் இடையே தர்மபுரி, சேலம், நாமக்கல்,...

தேர்தல் வருகிறது:பாசஞ்சர் ரயில் கட்டணம் குறைகிறது

நாகர்கோவில்- கோவை, ஈரோடு- செங்கோட்டை ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

by karurxpress
October 31, 2025
0

அக்.31. திண்டுக்கல் ரயில்வே யார்டில் தண்டவாளப் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப்...

பெங்களூரு- தூத்துக்குடி- பெங்களூரு சிறப்பு ரயில்கள் இயக்கம்

by karurxpress
October 14, 2025
0

அக். 14 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில்...

Load More
  • Trending
  • Comments
  • Latest
கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

May 14, 2024
கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

May 20, 2024
வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

November 19, 2024
ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

April 26, 2025

கரூர் மாவட்ட திமுக முன்னோடிகள் 270பேருக்கு பொற்கிழி முப்பெரும் விழாவில் செந்தில்பாலாஜி வழங்கினார்

0

ரூ 750 கோடியில் காவிரியில் தடுப்பணை குளித்தலை அருகே அமைச்சர் ஆய்வு

0

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் கரூர் மாவட்டம் இரண்டாம் இடம்

0

இல்லாத நிறுவனத்தின் ஆய்வறிக்கை பெற்று இயங்கிய கல்குவாரிகளால் பல கோடி அரசுக்கு இழப்பு ஆலோசனை கூட்டத்தில் அதிர்ச்சி தகவல்

0

பராமரிப்பு பணிகள்: மாற்றுப் பாதையில் இயக்கப்படும் ரயில்கள்

November 13, 2025
கரூர் விஷன் 20 30: மாரத்தான்- வாக்கத்தான் போட்டிகள்

கரூர் விஷன் 20 30: மாரத்தான்- வாக்கத்தான் போட்டிகள்

November 9, 2025
போதைப் பொருட்கள் நடமாட்டம்:  புகார் செய்ய புதிய செயலி அறிமுகம்

தற்காலிக பல்நோக்கு உதவியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

November 5, 2025
ஆன்லைனில் இழந்த ரூ.85லட்சம்: 163 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

கரூரில் காவலர் பதவிக்கு எழுத்து தேர்வு: சிறப்பு பேருந்துகள் இயக்கம்

November 5, 2025
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved

No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved