மே.10.
கரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலைப் பாடப்பிரிவுகளில் சேர்வதற்காக www.tngasa.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறை தொடங்கி உள்ளது. 27-05-2025 வரை விண்ணப்பிக்கலாம். இதனையடுத்து கரூர் அரசு கலைக் கல்லூரியில் மாணாக்கர் சேர்க்கை உதவி மையம் கல்லூரி முதல்வர் முனைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் செயல்படுகிறது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கும் மாணாக்கர் இம்மையத்தின் மூலம் விண்ணப்பம் பதிவு செய்துகொள்ளலாம். முன்னதாக பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விருப்பமுள்ள மாணாக்கர் இம்மையத்தை அணுகி இணையவழியாக விண்ணப்பிப்பதற்கான உரிய ஆலோசனைகளை இலவசமாகப் பெற்றுப் பயன் பெறலாம். மேலும், விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்களின் விவரங்கள் மேற்கூறப்பட்ட இணையதளத்தில் உள்ளது என்பதையும் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.