ஜூன்.8.
கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையம் அரசு மருத்துவமனைக்கு நமக்கு நாமே திட்டத்தில் ரூ .36 லட்சம் மதிப்பீட்டில் எழும்பு முறிவு அறுவை சிகிச்சைக்கு தேவையான அதிநவீன உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன. அதிநவீன உபகரணங்களான C-Arm.காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சைக்கான Fess கருவி, மயக்க மருந்து கொடுக்க தேவையான Anaesthesia work station, அறுவை அரங்கிற்கு தேவையான operation table,vertical autoclave,அறுவை சிகிச்சையின் போது நோயாளியின் இதய துடிப்பு,இரத்த அழுத்தம்.இரத்தத்தில் பிராண வாயு அளவு ஆகியவற்றை கண்காணிக்கும் multipara monitor ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டார். தலைமை மருத்துவர்.சுதா, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உடனிருந்தனர்.