ஏப்.22.
கரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏடிஎஸ்பிக்கள், டிஎஸ்பி க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்இன்ஸ்பெக்டர்கள், கலந்து கொண்டனர்.
மேலும் கலந்தாய்வு கூட்டத்தில் கொலை வழக்குகள், வழிப்பறி குற்றவாளிகள், இரவு மற்றும் பகல் கன்ன களவு குற்றவாளிகள், போக்கிரிகள் மற்றும் திட்டமிட்டு செயல்படும் குற்றவாளிகள், ஆகியோர்களை தொடர்ந்து கண்காணித்து முறையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். தொடர்ந்து கரூர் மாவட்ட காவல்துறையில் குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்து சிறப்பாக பணிபுரிந்த இன்ஸ்பெக்டர்கள் சப்-இன்ஸ்பெக்டர்கள் போலீசாருக்கு எஸ்.பி.பெரோஸ் கான் அப்துல்லா பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.