சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, கரூர் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம், கரூர் மாவட்ட நீதிமன்றம் சார்பில் கரூர் மாவட்டத்திலுள்ள நீதித்துறை அலுவலர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதித்துறை பணியாளர்களுக்கு காலநிலை மாற்றம் மற்றும் சட்ட ரீதியான தாக்கங்கள் குறித்த ஒருநாள் திறன் மேம்பாட்டுப்பயிற்சி நடைபெற்றது.
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, கரூர் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் மற்றும் கரூர் மாவட்ட நீதிமன்றம் சார்பில் கரூர் மாவட்டத்திலுள்ள நீதித்துறை அலுவலர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதித்துறை பணியாளர்களுக்கு கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர். மாவட்ட முதன்மை நீதிபதி. மற்றும் மாவட்ட வன அலுவலர் அறிவுறுத்தலின் படி, காலநிலை மாற்றம் மற்றும் சட்ட ரீதியான தாக்கங்கள் குறித்த ஒருநாள் திறன் மேம்பாட்டுப்பயிற்சி கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் செயலாளர் அனுராதா தலைமை வகித்து துவக்கி வைத்து பேசினார். சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம். மரங்களை வளர்ப்பதன் அவசியம். ஆரோக்கியமான வாழ்வியல் முறைகள் மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். உதவி வனப்பாதுகாவலர் முருகன், காலநிலை மாற்ற இயக்கம் குறித்து சிறப்புரை ஆற்றினார்.
பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் தேசிய பசுமைப்படை மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் துணிப்பைகள் வழங்கப்பட்டன. இதில் காலநிலை மாற்றம் மற்றும் அதன் சட்ட ரீதியான தாக்கங்கள் குறித்து திருச்சி அரசு சட்டக்கல்லூரி பேராசிரியர் முனைவர்.ராஜா, காலநிலை மாற்றத்தால் கரூர் மாவட்டத்தில் ஏற்படும் விளைவுகள், காலநிலை திறன்மிகு வாழ்வியல் முறைகள். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் குற்றங்கள் அதிகரிப்பு குறித்து முதலமைச்சரின் பசுமை தோழர் கோபால் பேசினார். இதில் காலநிலை மாற்றம் குறித்த உலகளாவிய அமைப்புகள். சட்டங்கள். இந்திய சட்டங்கள். வழக்குகள். சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம், காலநிலை மாற்றமும் சமூகநீதியும், நீதித்துறையினர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த நீதிபதிகள். வழக்கறிஞர்கள். நீதித்துறை பணியாளர்கள், வனச்சரக அலுவலர் முரளிதரன். முதமைச்சரின் பசுமைத்தோழர் கோபால் வனத்துறை களப்பணியாளர்கள். தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.