ஆக.25.
மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதியுடனான தனது நினைவுகளை ‘கலைஞர் எனும் தாய்’ எனும் பெயரில் அமைச்சர் எ.வ.வேலு புத்தகமாக எழுதியுள்ளார். இதன் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். தொடர்ந்து ‘கலைஞர் எனும் தாய்’ புத்தகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.
ரஜினிகாந்த் பேசியது-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் வெற்றிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆளுமையை காட்டுகிறது. ஒரு கட்சியை கட்டி காப்பாற்றுவது என்பது மிகக் கடினம். அதனை திறம்பட செய்கிறார் மு.க. ஸ்டாலின் . பள்ளியில் ஆசிரியரை பொறுத்தவரை புதிய மாணவர்களை விட பழைய மாணவர்களை சமாளிப்பது கடினமானது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் அதனை சிறப்பாக செய்து வருகிறார். ஹெட்ஸ்ஆப் ஸ்டாலின் சார் என்றார்
ரஜினிகாந்தின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் அதிக அளவில் வைரலாகி வருகிறது.