ஜன.10.
காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், எஸ்.பி. தலைமையில் நடைபெற்று வருகிறது. இதன்படி கரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்களிடமிருந்து கரூர் மாவட்ட எஸ்.பி. பெரோஸ் கான் அப்துல்லா. 18 மனுக்களை பெற்று மனு மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எஸ்.பி. உத்தரவிட்டார்.