ஜன.21.
கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையத்தில் மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை சிறிய அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி ஜனவரி 2025 மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 24-01-2025 வெள்ளிக்கிழமையன்று வெண்ணைமலை கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2மணி வரை நடத்தப்படவுள்ளது. இம்முகாமில் 25க்கும் மேற்பட்ட தனியார் துறை வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு 200க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பவுள்ளனர். இம்முகாமில் 5ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு டிப்ளமோ ஐடிஐ மற்றும் பொறியியல் பட்டதாரிகள் என அனைவரும் கலந்துகொண்டு பணிவாய்ப்பினை பெறலாம்.
கரூர் மாவட்டத்தை சார்ந்த வேலை தேடும் இளைஞர்கள் தங்களுடைய சுயவிவர குறிப்பு: கல்விச் சான்று ஆதார்அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலைளிப்போர் மற்றும் வேலைதேடும் இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இம்முகாம் முற்றிலும் இலவசமானது. பணி நியமனம் பெறும் மனுதாரர்களின் வேலைவாய்ப்பு பதிவு இரத்து செய்யப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு 04324-223555 மற்றும் 9499055912 என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.