டிச.8.
இந்திய முப்படை தளபதி பிபின் ராவத். இவர் இன்று காலை டெல்லியில் இருந்து கோவை வந்து உள்ளார். கோவை சூலூரில் இருந்து நீலகிரிக்கு ராணுவ ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டார். தளபதிகள் உள்ளிட்ட 9 பேர் பயணம் மேற்கொண்டுள்ளதை விமானப்படை உறுதி செய்துள்ளது .விமானப்படைக்கு சொந்தமான எம்ஐ17 வி5ரக ஹெலிகாப்டர் பனிமூட்டம் காரணமாக குன்னூர் அருகே விபத்துக்குள்ளாகி நொறுங்கி விழுந்தது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரிலிருந்து 7உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
முப்படைத் தளபதி பிபின் ராவத்தின் நிலை குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரதமர் மோடியுடன் அவசர ஆலோசனை நடத்திய பின்பு கோவை வருவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக அமைச்சர் ராமச்சந்திரன் நீலகிரி மாவட்ட கலெக்டர் ஆகியோர் சம்பவ இடத்தில் உள்ளனர்.
இதுகுறித்து விசாரணை நடத்த விமானப்படை உத்தரவிட்டுள்ளது. அதன் விபரம்.
An IAF Mi-17V5 helicopter, with CDS Gen Bipin Rawat on board, met with an accident today near Coonoor, Tamil Nadu.
An Inquiry has been ordered to ascertain the cause of the accident.