ஜன.7.
பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு ரயில்கள்.
2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, பெங்களூரு – தூத்துக்குடி -மைசூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை வழியாக பெங்களூரு தூத்துக்குடி மைசூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ரயில் எண்.06569 SMVT பெங்களூரு – தூத்துக்குடி சிறப்பு ரயில் SMVT பெங்களூருவில் இருந்து 10.01.2025 அன்று 22.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் 11.00 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்
ரயில் எண்.06570 தூத்துக்குடி- மைசூர் சிறப்பு ரயில் தூத்துக்குடியில் இருந்து 11.01.2025 அன்று மதியம் 13.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 06.30 மணிக்கு மைசூரை சென்றடையும்.
பெட்டிகள்: ஏசி 3-அடுக்கு, ஸ்லீப்பர்வகுப்பு மற்றும் பொது இரண்டாம் வகுப்பு.
நிறுத்தங்கள்: கிருஷ்ணராஜபுரம்,பங்காரப்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் மற்றும் கோவில்பட்டி.
ரயில் எண்.06570 தூத்துக்குடி – மைசூர் சிறப்பு ரயில் KSR பெங்களூரு, மாண்டியா மற்றும் யெலியூரில் நின்று செல்லும்.சேலம் கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களின் நேரங்கள்: ரயில் எண்.06569 SMVT பெங்களூரு தூத்துக்குடி சிறப்பு ரயில்: (11.01.2025 அன்று) சேலம் 03.23/03.33 மணி; நாமக்கல் – 04.28/04.30 மணி; கரூர் – 05.18/ 05.20 மணி.
சேலம் கோட்டம் நிலையம் நேரம் ரயில் எண்.06570 தூத்துக்குடி- மைசூர் சிறப்பு ரயில்: (11.01.2025 அன்று) கரூர் – 18.08/18.10 மணி; நாமக்கல் – 18.40/18.42 மணி; சேலம் – 19.35/19.45 மணி. இத்தகவலை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.