செப்.3.
கரூர் மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்களையும், ஆன்லைனில் ஏமாந்த 73 லட்சம் பணத்தையும் மீட்டு உரியவர்களிடம் சைபர் கிரைம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.
கரூர் மாவட்ட எஸ்.பி. பெரோஸ் கான் அப்துல்லா இந்நிகழ்வுக்கு தலைமை வகித்து பேசினார். கரூர் மாவட்டத்தில் காணாமல் போன 200 க்கும் மேற்பட்ட செல்போன்களை உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கரூர் மாவட்ட தாலுகா மற்றும் சைபர் கிரைம் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட 50 லட்சம் மதிப்புள்ள 200 க்கும் மேற்பட்ட செல்போன்களை பொருட்களை உரிய நபர்கள் வந்து பெற்றுக் கொண்டனர்.
மேலும் பொதுமக்கள் மொபைல் போனில் வரும் லிங்க், யூடியூப் விளம்பரம் மற்றும் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்க பணம் அனுப்பி ஏமாந்தவர்களின் பணம் ரூ. 73 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மீட்கப்பட்டு இழந்த நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
தொலைந்து மற்றும் திருடுபோன பொருட்களை விரைவாக கண்டுபிடித்து சிறப்பாக செயல்பட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கலைவாணி, சப்இன்ஸ்பெக்டர் சுதர்சனன் மற்றும் காவலர்கள் அனைவரையும் எஸ்.பி பாராட்டினார்.