ஜன.13.
கரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இன்று கரூர் மாவட்ட எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா முன்னிலையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
இந்த சமத்துவ பொங்கல் விழாவில் காவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் நல்லுறவு ஏற்படுத்தும் வகையில் விளையாட்டு போட்டிகள் மற்றும் தனித்திறமை போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு எஸ்.பி. பரிசு வழங்கி பாராட்டினார். தொடர்ந்து மாவட்ட காவல் அலுவலகதில் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவலர்கள் சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் எஸ்.பி.கலந்துகொண்டார்.