ஜன.12.
தமிழ்நாட்டில் 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 11 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன.
விருதுநகர்,
நாமக்கல்,
நீலகிரி,
திருப்பூர்,
திருவள்ளூர்,
நாகப்பட்டினம்,
திண்டுக்கல்,
கள்ளக்குறிச்சி,
அரியலூர்,
ராமநாதபுரம்,
கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளது.
புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசின் சார்பில் 2 ஆயிரத்து 145 கோடி ரூபாயும், மாநில அரசின் சார்பில் ஆயிரத்து 855 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளன.
புதிய மருத்துவக் கல்லூரிகளின் மூலம், தமிழ்நாட்டில் கூடுதலாக 1450 மருத்துவ இடங்கள் உருவாகியுள்ளன.
11 புதிய மருத்துவக் கல்லூரிகளையும், பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். மேலும் சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன மைய கட்டிடத்தை பிரதமர் காணொளி வாயிலாக துவக்கி வைத்தார். பொங்கல் மகா சங்கராந்தி வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர் ‘தை பறந்தால் வழிபிறக்கும் ‘ என குறிப்பிட்டு தனது உரையைத் துவக்கினார். தமிழக ஆளுனர் ஆர் என்.ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு. க .ஸ்டாலின், மத்திய மருத்துவ துறை அமைச்சர் முனைவர் மன்சுக் மாண்டவியா, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தொழில்துறை அமைச்சர் தங்கம்தன்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.