ஆக.19.
நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்னும் தூய்மை பணியில்* கரூர் மாநகராட்சி மற்றும் கரூர்
மருந்து கடை உரிமையாளர்கள் சங்கம் இணைந்து நடத்திய மாபெரும் பிளாஸ்டிக் ஒழிப்பு தூய்மை பணி முகாம் இன்று நடைபெற்றது.
அமராவதி ஆற்றில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்யும் பணி நடைபெற்று தூய்மை பணியாளர்களுடன் தன்னார்வலர்களும் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கரூர் லைட் ஹவுஸ் கார்னர் அமராவதி
ஆற்றுப் படுகை இறக்கத்தில் தூய்மைப் பணியில் மேயர் துணை மேயர் ஆணையாளர் அலுவலர்கள் ஈடுபட்டனர். பொதுமக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன தன்னார்வலர்கள் முகமில் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், மாநகர நல அலுவலர் இலட்சிய வர்ணா, 33 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பால வித்யா அருள்முருகன், சுகாதார ஆய்வாளர்கள்,
பரப்புரையாளர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் தூய்மை பணியில் ஆர்வமுடன் கலந்து கொண்டு பங்களித்தனர்.
முன்னதாக அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

