ஜூலை.15.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுரி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பான திட்டத்தை கிராமப் பகுதிகளில் அமல்படுத்தும் பொருட்டு தொடங்கி வைத்துள்ளார். அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் வெள்ளியணை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றது.
கடந்த முறை 18.12.2023 முதல் 06.01.2024 வரை கரூர் மாநகராட்சியில் 16 இடங்களிலும், நகராட்சிகளில் 13 இடங்களிலும், பேரூராட்சிகளில் 16 இடங்களிலும், மாநகராட்சி ஒட்டியுள்ள புறநகர்ப் பகுதிகளில் 5 இடங்களிலும், என மொத்தம் 50 இடங்களில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றதில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் 20,748 பெறப்பட்டன. அவற்றில் 16.165 மனுக்கள் பல்வேறு துறையின் கீழ் மனுதாரர்களுக்கு நல திட்டங்களாக வழங்கப்பட்டது.
மேலும், தற்போது இம்முகாம் கரூர் மாவட்டத்தில் வருகின்ற 16, 18, 23, 25, 30. மற்றும் 1. 6 மற்றும் 08.08.2024 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் அதிகமாக அணுகும் 15 அரசு துறைகள் ஒரே இடத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் 44 வகையான சேவைகள் வழங்கப்படவுள்ளன.
அதேபோன்று, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவரும் தங்களது கோரிக்கை மனுக்களை எளிதாக பதிவு செய்யும் வகையில் சாய்வுதள வசதி. சக்கர நாற்காலிகள், குடிநீர் வசதி. சுகாதார வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் இம்முகாம்களில் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே பொது மக்கள் அனைவரும் தங்கள் பகுதியில் நடைபெறும் இம்முகாம்கள் மூலம் அரசின் சேவைகளை பெற்று பயன் பெறுமாறு கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
செல்லாண்டிப்பட்டி நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி. பிரபாகர், மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், துணை மேயர் சரவணன், தாந்தோணி ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் சிவகாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.