மார்ச்.3.
கரூர் அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உடனுறை கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மாலையில் சுவாமி அம்பாள் திருவீதி உலா நடைபெற்றது. வரும் 9 ம் தேதி (புதன்) திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7.15 மணிக்கு திருத்தேர் திருவிழா நடைபெறுகிறது. தினமும் காலை 7மணிக்கும், மாலை6.30 மணிக்கும் சுவாமியே திருவீதி உலாவும், விழா தினங்களில் சொற்பொழிவும், இசை நிகழ்ச்சியும், நால்வர் அரங்கில் நடைபெறுகிறது.