அக்.7.
சேலம் ரயில்வே கோட்டம் இந்த நிதியாண்டின் முதல் பாதியில் (ஏப்ரல் – செப்டம்பர், 2023) நடத்திய டிக்கெட் சரிபார்ப்பு இயக்கங்கள் மூலம் ரூ.7,30,19,177/- ஈட்டியது. சேலம் கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். சோதனைகளின் போது, டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்கள், ஒழுங்கற்ற பயணம், முன்பதிவு செய்யாமல் சென்றது, கட்டணம் செலுத்தாமல் லக்கேஜ் கொண்டு சென்றது ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
ஏப்ரல் -செப்டம்பர், 2023 வரை சேலம் கோட்டத்தில் சோதனையில், டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணம் செய்த 67,996 குற்றவாளிகளிடமிருந்து அபராதமாக ரூ.5,22,77,164/- வசூலித்தது.
மேலும், முறைகேடாக பயணித்த 40,669 பேர் மீது முறைகேடு பயண வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பயணிகளிடமிருந்து அபராதமாக ரூ.2,06,20,852/- வசூலிக்கப்பட்டது.
அதேபோல், இந்த நிதி ஆண்டின் முதல் பாதியில் முன்பதிவு செய்யப்படாத லக்கேஜ் / அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான லக்கேஜ் கொண்டு செல்லும் 205 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன. முன்பதிவு செய்யப்படாத லக்கேஜ் வழக்குகளுக்கு அபராத தொகை ரூ.1,21,161/- ஆகும். பார்க்கும் படை அதிகாரிகள் சோதனையின் போது வசூலிக்கப்பட்ட மொத்த தொகை ரூ.7,30,19,177/-.
பிளாட்பாரம் டிக்கெட் எடுக்காமல் வந்தவர்கள்13,216 பேர். அபராதமாக வசூலிக்கப்பட்ட தொகை ரூ.1,02,55,941/-. சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் இதனை தெரிவித்துள்ளது.
Rate this translation