ஜூன்.22.
இங்கிலாந்து அரசின் அழைப்பின் பொருட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, தமிழ்நாட்டில் OFFSHOREல் காற்றாலை அமைப்பது குறித்து, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இங்கிலாந்து சென்றுள்ளார். Associated British Ports, Grimsby – Imminghamல் ஆய்வு மேற்கொண்டார். எரிசக்கித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ரமேஷ்சந்த் மீனா I.A.S, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி I.A.S மற்றும் இயக்குநர்/பகிர்மானம் சிவலிங்கராஜன் உடனிருந்தனர். கடலில் காற்றாலை அமைத்து மின் உற்பத்தியை பெருக்கும் நோக்கில், இங்கிலாந்து, Grimsby, North Sea பகுதியில் அமைந்துள்ள OFFSHORE காற்றாலைகளை அமைச்சர் செந்தில்பாலாஜி சென்று பார்வையிட்டார்.