மே.26.
ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அபிஷேக் ஷர்மா -டிராவிஸ்ஹெட் ஜோடி களம் இறங்கியது அபிஷேக் 2 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து ரன் ஏதும் எடுக்காமல் ஹெட் வெளியேறினார். ராகுல் திருபாதி ஒன்பது ரன்னில் அவுட் ஆனார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது ஹைதராபாத் அணி. தொடர்ந்து நிதிஷ்ரெட்டி, மார்க்ரம், ஷாபாஷ் அகமது, அப்துல் சமத், கிளாசன் ஆகியோரும் வரிசையாக பெவிலியன் திரும்பினர். கம்மின்ஸ் எடுத்த 24 ரன்களே அதிகபட்ச ரன்னாக இருந்தது18.3 ஓவர்களிலேயே 113 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. ரஸல் 3 விக்கெட், ஸ்டார்க்- ராணா தலா இண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற எளிய இலக்குடன் கொல்கத்தா அணி களம் இறங்கியது. ரகுமானுல்லா குர்பாஸ்- சுனில் நரைன் ஜோடி களம் இறங்கியது நரேன் 6 ரன்னில் அவுட் ஆனார். அதன் பிறகு வெங்கடேஷ் ஐயர்- குர்பாஸ் பாஸ் இணைந்து அதிரடி ஆட்டம் ஆடினர். குர்பாஸ் 39ரன் எடுத்தார். வெங்கடேஷ் அதிரடியில் பவர் பிளே முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்தது கொல்கத்தா. வெங்கடேஷ் ஐயர் 24 பந்துகளில் அரை சதம் விளாசினார். அவர் 26 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார் மூன்று சிக்ஸர்கள் பறக்கவிட்டு நாலு பவுண்டர்களை விளாசினார். 11 ரன்களுக்கு பிறகு ஸ்கோர் 102 ஆக இருக்கும்போது தான் அடுத்த விக்கெட் எடுக்க முடிந்தது. விக்கெட் எடுக்க முடியாமல் ஹைதராபாத் வீரர்கள் திணறினர். முடிவில் 10.3 ஓவரிலேயே இரண்டு விக்கெட் மட்டுமே இழந்து 114 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணியை சுருட்டி வீசியது.
கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஹைதராபாத் அணியானது கேப்டன் கம்மின்சை மட்டுமே நம்பி இருந்தது. ஒருவரை மட்டுமே எதிர்பார்த்து டீம் ஒர்க் இல்லை. இதுவே இறுதிப் போட்டிக்கு வந்தும், கோப்பையை வெல்ல முடியாமல் மோசமான தோல்வி அடைவதற்கு காரணம் என கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்தனர்.