ஏப்.26.
கரூர் மாவட்டத்திலுள்ள 50 நீர் நிலைகளில் விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் வண்டல், களிமண் போன்றவற்றை எவ்வித கட்டணமுமின்றி வெட்டி எடுத்து செல்ல அருகிலுள்ள இ சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்டகலெக்டர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. கலெக்டர் கூறுகையில்,
கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் போதுமான அளவில் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், யூரியா 2344 மெட்ரிக் டன்னும், டிஏபி 260 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 1636 மெட்ரிக் டன்னும், என்.பி.கே. 1811 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 6,051 மெடன் ரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் நெற்பயிர் சாகுபடிக்காக CO 55. R 20. BPT, CO 50, CO 52 125 மெட்ரிக் டன்னும். சிறுதானியங்கள். கம்பு கோ 10. சோளம் Co32, K12, ஆகியவை 13.00 மெட்ரிக் டன்னும். பயறு வகை பயிர்கள். உணாந்து VEN-8&.VBN10. கொள்ளு பையூர் 2. தட்டை பயறு VBN 3. ஆகியவை 18.00 மெட்ரிக் டன்னும் மற்றும் எண்ணெய் வித்துக்கள். நிலக்கடலை K 1812 கோ-7. VRI-3 டி.எம்.வி 7 ஆகியவை 5.00 மெட்ரிக் டன்னும் இருப்பில் உள்ளது.
கரூர் மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழை அளவு ஏப்ரல் மாதம் வரை 64.00 மிமீ ஆகும். நடப்பு ஆண்டு ஏப்ரல் 2025 வரை 74.84 மி.மீ மழை பெய்துள்ளது. அதேபோன்று, ஏப்ரல் மாதம் முடிய 550 ஹெக்டர் பரப்பளவில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
அதே போல், கரூர் மாவட்டத்திலுள்ள கரூர், குளித்தலை. பள்ளப்பட்டி வேலாயுதம்பாளையம், வெங்கமேடு மற்றும் காந்திகிராமம் ஆகிய 6 உழவர் சந்தைகளில் 51.04 மெடன் காய்கறிகள் ரூ. 19.37 இலட்சம் மதிப்பீட்டில் விற்பனையாகி உள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள 50 நீர் நிலைகளில் விவசாயிகள் மற்றும் மட்பாண்ட தொழிலாளர்கள் வண்டல் களிமண் போன்றவற்றை எவ்வித கட்டணமுமின்றி எடுத்து செல்லலாம். அருகிலுள்ள இ-சேவை மையங்களில் உரிய ஆவணங்களுடன் இணையதள வழியில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் கூறினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், குளித்தலை சார் ஆட்சியர் சுவாதி ஸ்ரீ, வேளாண்மை இணை இயக்குநர் சிவானந்தம், ஆர்.டி.ஓ. முகமது பைசல், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் சாந்தி, வேளாண் அலுவலர் உமா, கலந்து கொண்டனர்