ஏப்.9.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் படித்து முடித்து பதிவு செய்து எவ்வித வேலை வாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்காக, மாதம் ஒன்றுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200, தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300/, மேல் நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400/. மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.600, வீதம் மூன்றாண்டு காலத்திற்கு உதவித் தொகை வழங்கப்படுசிறது.
மேலும் அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை மாதம் ஒன்றுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ/-600. மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 750/. மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.1000/. வீதம் பத்தாண்டு காலத்திற்கு வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மேற்கண்ட கல்வித் தகுதிகளை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் தெறி வழி காட்டும் மையத்தில் பதிவு செய்து 31.03.2025 உடன் ஐந்தாண்டுகாலம் முடிவுற்ற பதிவுதாரர்களும், மேலும் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஒருவருடம் முடிவுற்ற பதிவுதாரர்களும் தகுதியுடையவர்கள் ஆவர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும். இதர வகுப்பினர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
மனுதாரர் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு இல்லை. மனுதாரர் அரசு அல்லது தனியார் நிறுவனங்கள் வாயிலாக எவ்விதமான நிதி உதவி தொகையும் பெறுபவராக இருக்க கூடாது . மனுதாரர் உதவித்தொகை பெறும் காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருக்க வேண்டும். மேற்கண்ட தகுதியுடையோர் உடனடியாக வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள் மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வருமாறு தெரிவிக்கப்படுகிறது.
சுயஉறுதிமொழி ஆவணம் கொடுத்தவர்களுக்கு மட்டுமே தொடர்ச்சியாக உதவித்தொகை மூன்று ஆண்டுகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு தொடர்ந்து பத்தாண்டுகளுக்கும் வழங்கப்படும். இதுவரை உறுதி மொழி ஆவணம் கொடுக்காத நபர்கள் உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சுயஉறுதிமொழி ஆவணத்தினை சமர்ப்பிக்குமாறு கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
.