ஏப்.10.
மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சரும், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான செந்தில் பாலாஜி இன்று கோவை பகுதியில் அரசு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தும். முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கோயமுத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலம், வார்டு 8க்குட்பட்ட காளப்பட்டி பகுதியில், காளப்பட்டி சாலை (NGP PETROL BUNK) முதல் சரவணம்பட்டி சாலை வரையுள்ள இணைப்பு சாலையில், ரூ.1 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி, வார்டு 61க்கு உட்பட்ட சிங்காநல்லூர் குளத்தில், ரூ 4.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2MlD சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார். விளாங்குறிச்சியில், கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் கட்டிடம் கட்டும் பணி மற்றும் சிங்காநல்லூர் பகுதியில் ரூ 29.92 கோடி மதிப்பில் புதிய 10 நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
மாணவச் செல்வங்களின் தாயுமானவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M. K. Stalin அவர்களின் நல்லாசிகளுடன், கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், சித்தாபுதூர், வார்டு எண்கள் 63, 83 மற்றும் 67ல், ரூ 22.42 லட்சம் மதிப்பில், புதிய நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி, கணபதி, வடக்கு மண்டலம் வார்டு எண் 28 மற்றும் 30ல், நியாய விலை கட்டிடம் மற்றும் புனரமைக்கப்பட்ட நகர்புற மையத்தை துவக்கி வைத்தார். R.S.புரம் அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், ARVR labஐ திறந்து வைத்து, வார்டுகள் 74, 41, 40, 39 & 75ல், ரூ 45.15 லட்சம் மதிப்பில், மொத்தமாக 10 புதிய நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். இந்நிகழ்வில், கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்..