முருகப்பெருமானின் ஏழாம்படை வீடாக கருதப்படும் கோவை மருதமலை சுப்ரமணிய சாமி கோயிலில் குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா நடைபெற்றது. அதிகாலை 4.30 மணி முதலே ஆறுகால பூஜையிலிருந்து ஆரம்பித்தது. 6 மணி முதல் 6.45 வரை மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 7.30 மணி அளவில் யாக சாலையிலிருந்து மூலவருக்கு திருகுடங்கள் ஏந்தி கோவிலை சுற்றி வலம்வந்து குடமுழுக்கு செய்யப்பட்டது. ஆதிமூலவர், ராஜகோபுரம், கொடி மரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் குடமுழுக்கு நடைபெற்று பின்பு 9 மணி அளவில் ஆதிமூலவர், விநாயகர், மருதமலை மூர்த்தி, சதீஸ்வரர், மரகதாம்பிகை, வீரபாகு உள்ளிட்ட தெய்வங்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற முழக்கத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மூலவருக்கு பேரொளி வழிபாடு நடைபெற்அங்கு கூடி இருக்கும் பக்தர்கள் அரோகரா என்று முழங்கி முருகனின் பக்தி பரவசத்துடன் மூழ்கிய குடமுழுக்கு நடைபெற்று வருகிறது. நவீன தத்துவத்தை பயன்படுத்தி டிரோன்கள் மூலம் தீர்த்தத்தை தெளிக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதில் கோவை மட்டும் அல்லாமல் அண்டை மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த குடமுழுக்கில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
அங்கு கூடி இருக்கும் பக்தர்கள் அரோகரா என்று முழங்கி முருகனின் பக்தி பரவசத்துடன் மூழ்கிய குடமுழுக்கு நடைபெற்று வருகிறது. நவீன தத்துவத்தை பயன்படுத்தி டிரோன்கள் மூலம் தீர்த்தத்தை தெளிக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதில் கோவை மட்டும் அல்லாமல் அண்டை மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த குடமுழுக்கில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முப்பதாயிரம் பேருக்கு கோவை மாவட்ட பொறுப்பு வகிக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதானம் வழங்கி நிகழ்ச்சியை அமைச்சர் துவக்கி வைத்தார்.