கரூர், மே.6.
சேலம் கோட்ட ரயில்வே துறையின் கலந்தாய்வுக் கூட்டம் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்என்.சிங் , கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா, சேலம் எம்.பி.செல்வ கணபதி தலைமையிலும் கரூர் மற்றும் ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், கோவை, பொள்ளாச்சி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள், மற்றும் துணைப்பொது மேலாளர் கோட்ட அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்றது. கரூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக கரூர்தொகுதி எம்.பி.ஜோதிமணி பேசினார். சில கோரிக்கைகளை ஏற்று பணிகளைச் செயல்படுத்தி வரும் ரயில்வே துறைக்கு நன்றி தெரிவித்தார்.
நிறைவேற்றப்படாத முக்கிய கோரிக்கைகள்-
1.மங்களூரில் இருந்து கரூர் வழியாக சென்னை செல்லும் ரயில் சென்னை எழும்பூர் வரை செல்லாமல் தாம்பரத்துடன் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அதை மீண்டும் சென்னை எழும்பூர் வரை நீட்டிக்க வேண்டும்.
அதே வழித்தடத்தில் தான் முத்துநகர்,ராக்போர்ட்,
பல்லவன் விரைவு ரயில்கள் சென்று வருகின்றன. பிறகு மங்களூர் விரைவு ரயில் மட்டும் ஏன் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், முதியவர்கள்,குழந்தைகள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
சித்தலவாய் ரயில் நிலைய முன்பதிவு மையத்தை இடமாற்றம் செய்யும் முடிவினை கைவிடுதல்.- கரூர் முதல் சென்னை வரை பகல் நேரத்தில் ரயில் சேவை வசதி ரயில்வே மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். மாயனூர், வீரராக்கியம், அண்ணா நகர், அய்யலூர், மணப்பாறை.இலங்காகுறிச்சி வையம்பட்டி ஆர்.எஸ்- இறைவன் நகர்.
ரயில்வே சுரங்கப்பாதைகளில் நீர் தேங்குவதால் போக்குவரத்து பாதிப்பு- வெள்ளப்பாறை, சுப்ரமணிய பிள்ளையூர், புளியம்பட்டி, புதுக்கோட்டை, நல்லமனார்கோட்டை, எரியோடு, ராமகிரி பிரிவு- செங்காட்டுப்பட்டி பிரிவு, R.P.பிள்ளமநாயக்கன் பட்டி , புளியம்பட்டி, இந்திரா நகர், நாகையக்கோட்டை, வெள்ளியணை – வல்லியம்புதூர் – ஜல்லிப்பட்டி. குமாரம்பட்டி வியாம்பட்டி, மணப்பாறை நகரம்.
ரயில் நிறத்தம்செய்ய வேண்டும் பகுதிகள்.
- செங்கோட்டை-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ், அய்யலூர் ரயில் நிலையம்
- பழனி எக்ஸ்பிரஸ்- பாளையம் ரயில் நிலையம்ண்
- திருநெல்வேலி – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் – அய்யலூர் ரயில் நிலையம்
- திண்டுக்கல் – விழுப்புரம் எக்ஸ்பிரஸ் – அய்யலூர் ரயில் நிலையம்
- திருப்பதி ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் – மணப்பாறை ரயில் நிலையம்
6.மதுரை – திருப்பதி எக்ஸ்பிரஸ் – மணப்பாறை ரயில் நிலையம்
7.சென்னையிலிருந்து கொல்லம் வரை செல்லும் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் – மணப்பாறை ரயில் நிலையம் - திருச்செந்தூர் – சென்னை எக்ஸ்பிரஸ் – மணப்பாறை ரயில் நிலையம்
கோவை – கரூர் – வாஞ்சி மணியாச்சி- தூத்துக்குடி -நாகர்கோவில் இணைப்பு ரயில் சேவை- கொரோனா காலத்திற்கு முன் செயல்படுத்தப்பட்ட சேவையினை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
மூடப்பட்ட மண்டையூர் ரயில் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும். கரூர் வழியாக மங்களூர் செல்லும் சென்னை எக்ஸ்பிரஸில் முதல் ஏசி பெட்டிகளை இணைத்தல்-மணப்பாறை ரயில் நிலையத்தில் மேற்கூரை- சென்னை எக்மோர் முதல் சேலம் வரை செல்லும் வண்டி எண் 22153/22154 கரூர், நாமக்கல் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். காலை மற்றும் மாலை நேரங்களில் சேலம் முதல் மதுரை வரை நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக புதிய ரயில் சேவை தொடங்க வேண்டும். சேலம் முதல் கரூர் வழியாக திண்டுக்கல் வரையும்- ஈரோடு முதல் கரூர் வரை – கரூர் முதல் திருச்சி வரை - இரட்டிப்பு ரயில்வே வழித்தடம் அமைக்க வேண்டும். பசுபதிபாளையம் – ஆண்டாள் நகர் மேற்கு வீதி ரயில்வே சுரங்கப் பாதை பணியை விரைவுபடுத்த வேண்டும். அய்யலூர் ரயில் நிலையத்தில் அருகாமையில் வனப்பகுதிகளில் வசிக்கும் மாணவ/மாணவியர்கள் கல்லூரி பயில திருச்சி, மதுரை, திண்டுக்கல் போன்ற நகரங்களுக்கு படிக்கச் செல்வதற்கு வசதியாக அய்யலூர் ரயில் நிலையம் வழியாக செல்லும் ரயில்கள் அய்யலூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.