மே.11.
கரூர் அருள்மிகு மாரியம்மன் திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் இன்று தொடங்கியது. முன்னதாக இன்று காலை கரூர் பாலம்மாள் புரத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவிலில் வழங்கப்பட்டது. மாலையில் கரூர் அமராவதி ஆற்றுக் கரையிலிருந்து சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கம்பம் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. வழிநெடுக பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கோவிலை அடைந்ததும் அங்கு கம்பம் நடப்பட்டது. பக்தர்கள் புனித நீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர்.
பூச்சொரிதல் விழா வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. 18ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 26 ஆம் தேதி திருத்தேர் விழாவும் நடைபெறுகிறது. 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் மகா சண்டி யாக பெருவிழாவும், 26 , 27 தேதிகளில் பக்தர்கள் அக்கினி சட்டிஎடுத்து வந்தும், அலகு குத்தியும் நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சியும், 25 26 27 ஆம் தேதிகளில் பால்குடம் மாவிளக்கு எடுத்து வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். 28ஆம் தேதி கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.